புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வரும் ஜெயக்குமார்… அவசர அவசரமாக சிறையிலேயே சந்தித்த முன்னாள் அமைச்சர்கள்…!!

Author: Babu Lakshmanan
11 March 2022, 2:41 pm

சென்னை : புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை முன்னாள் அமைச்சர்கள் திடீரென்று சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சி நகர்ப்புற தேர்தலின் போது, கள்ள ஓட்டுப் போட வந்ததாகக் கூறப்படும் திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் கைது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து பல்வேறு வழக்குகள் அவர் மீது போடப்பட்டது. இது அரசியல் பழிவாங்கும் செயல் என அதிமுக விமர்சித்தது.

இதனிடையே, அவர் மீது சுமத்தப்பட்ட வழக்குகளில் ஜெயக்குமாரை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் சிறையில் இருந்து வெளியே வர உள்ளார்.

இந்த நிலையில், சிறையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதில் முன்னாள் அமைச்சர்கள், தங்கமணி, மூர்த்தி, பெஞ்சமின் மற்றும் அதிமுக தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!