கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு…இளைஞர் கைது: தேர்தல் பணியை தடுக்க சதி?…கராத்தே தியாகராஜன் கடும் கண்டனம்..!!

Author: Rajesh
10 February 2022, 9:30 am
Quick Share

சென்னை: பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அலுவலகத்தின் உள்ளே பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் துறைக்கு தகவல் தரப்பட்டது.


இதனையடுத்து விரைந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். நடத்திய விசாரணையில், சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த வினோத் என்பவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டு அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டுள்ள வினோத்திடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. என்ன காரணத்திற்காக குண்டு வீசப்பட்டது, யாரேனும் செய்த தூண்டுதலின் பேரில் இந்த குண்டு வீச்சு நடைபெற்றதா என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கராத்தே தியாகராஜன் கண்டனம்
Views: - 899

0

0