பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு… இன்னும் தேர்தல் வேலையே ஆரம்பிக்கல.. அதுக்குள்ளயா? தேமுதிக ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2024, 11:23 am
premalatha------updatenews360
Quick Share

பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு… இன்னும் தேர்தல் வேலையே ஆரம்பிக்கல.. அதுக்குள்ளயா? தேமுதிக ஷாக்!

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளில், அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில், கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை வீதிகளை மீறி தேமுதிக அலுவலகத்தில் பேனர் வைத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளிராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 64

0

0