சொல்ல வார்த்தைகளே இல்ல… சென்னைக்கு காத்திருக்கும் ஆபத்து ; தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

Author: Babu Lakshmanan
4 December 2023, 11:39 am
Quick Share

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் இருந்து 130 கிலோ மீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையில் வங்கக்கடலில் மிக்ஜம் புயல் மையம் கொண்டுள்ளது. இந்தப் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

இன்று அதிகாலையும் கனமழை நீடித்து வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும், தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் மழைநீர் புகுந்தும், கார் உள்ளிட்ட வாகனங்களை வெள்ள அடித்துச் செல்வது உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை சென்னை மக்கள் சந்தித்து வருகின்றனர். அதேவேளையில், அநாவசியமாக பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுத்த நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பெரிய பாதிப்புகள் ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இந்த நிலையில், இந்த மோசமான நிலைமையை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றும், புயல் மேகங்களின் மெதுவான நகர்தலால் இன்று மாலை அல்லது இரவு வரை சென்னையில் பெரிய அளவில் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது இந்த எச்சரிக்கையை தொடர்ந்து 4 மாவட்ட மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

Views: - 293

0

0