எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டிய கல்லை இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன்.. மதுரையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2024, 2:53 pm
udhay
Quick Share

எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டிய கல்லை இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன்.. மதுரையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!!

மக்களவை தேர்தல் பிரசாரத்தை மதுரையில், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மேற்கொண்டார். அப்போது அவர் பேசும் போது, “கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி மதுரைக்கு வந்தார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிவிட்டு சென்றார். அந்த கல்லை இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன்.

நீங்கள் மருத்துவமனையை கட்டிமுடிக்கும் வரை நான் இந்த செங்கல்லை கொடுக்க மாட்டேன். 2020ல் நாட்டை வல்லரசாக்குவேன் எனக்கூறினார். ஆனால் இப்போது 2047ம் ஆண்டு நாட்டை வல்லரசாக மாற்றுவேன் என கூறியுள்ளார். பிரதமர் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. ஆனால் இந்தி, சமஸ்கிருதம் மொழிகளுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.

மிக்ஜம் புயல் பாதிப்பு, மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டபோது பிரதமர் தமிழகம் வரவில்லை. மழை வெள்ள நிவாரண நிதியாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டார். ஆனால் தமிழகத்துக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் நிதி கூட கொடுக்கவில்லை.” என்றார்.

நம்ம டிவி நம்ம ரிமோட்.. அது இங்கதான் இருக்கும்.. எப்ப வேணாலும் உடைக்கலாம் : திமுக கூட்டணியில் உள்ள கமல்ஹாசன் பேச்சு!

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு அளித்துள்ளது. கமல்ஹாசன் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் கொடுக்கப்பட உள்ளது. மக்களவை சீட் எதுவும் ஒதுக்கவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.கவை கடுமையாக விமர்சித்து கமல்ஹாசன் பேசிவந்தார். கமல்ஹாசன் பிரசார விளம்பர வீடியோவில், தொலைக்காட்சி பெட்டியை தனது கையில் இருந்த ரிமோட்டை வைத்து உடைக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். தி.மு.க.வை கடுமையாக விமர்சித்துவிட்டு தற்போது, அந்தக் கூட்டணியில் ஐக்கியம் ஆனதை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில், சென்னையில் இன்று கமல்ஹாசன் பேசுகையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:- மக்களவைத் தேர்தலில் போட்டியிடாததற்கு நிறைய பேர் வருத்தப்பட்டார்கள்; இந்த முடிவை எப்படி என்ன தைரியத்தில் எடுத்தீர்கள் என்றெல்லாம் ராஜாஜியை கேட்டது போல் என்னையும் கேட்பார்கள் அவர் சொன்ன பதிலை தான் நானும் சொல்லுவேன். நான் காந்தியின் கொள்ளு பேரன். நாம் காந்தியின் கொள்ளு பேரன்கள். எனக்கு சந்தர்ப்பவாதம் என்ற ஒரு வாதமே இல்லை.

நம் வாதத்தை சந்தர்ப்பத்திற்கேற்ப பேசக்கூடாது. தேர்தலில் போட்டியிடாதது தியாகம் இல்லை..வியூகம். தி.மு.க.வை விமர்சித்து ரிமோட்டை எடுத்து டி.வியை உடைத்துவிட்டு இப்போது கூட்டணியா என கேட்கிறார்கள்.

நமது டி.வி; நமது ரிமோட்: அது இங்குதான் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் உடைத்துக் கொள்ளலாம். டி.வி.க்கான கரண்ட், ரிமோட்டுக்க்கான பேட்டரியை எடுக்க நினைப்பவர்கள்தான் நமக்கு முக்கியம்” என்றார்.

Views: - 93

0

0