பூரண குணமடைந்து வீடு திரும்பினார் விஜயகாந்த் : மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..தேமுதிக தொண்டர்கள் உற்சாகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 December 2023, 10:41 am
prema
Quick Share

உடல் நலக்குறைவு காரணமாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 18-ந்தேதி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மார்பு சளி, இருமல் காரணமாக செயற்கை சுவாசக்கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவரது உடல்நிலை குறித்த வதந்திகள் பரவிவந்த நிலையில், விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார் என்றும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவிய நிலையில், அவருடைய மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா வீடியோ வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார் என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மார்பு சளி, இருமல், உடல்நல பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 18ம் தேதி முதல் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவருக்கு வழக்கமான உடல்பரிசோதனை மற்றும் சிகிச்சை முடிந்த நிலையில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ள

Views: - 251

0

0