“Right to Die with Dignity” : இறந்த குழந்தையை அட்டை டப்பாவில் கொடுத்த அரசு மருத்துவமனையின் செயலுக்கு பத்திரிகையாளர் ஆவுடையப்பன் கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
11 December 2023, 11:45 am
Aavuda
Quick Share

“Right to Die with Dignity” : இறந்த குழந்தையை அட்டை டப்பாவில் கொடுத்த அரசு மருத்துவமனையின் செயலுக்கு பத்திரிகையாளர் ஆவுடையப்பன் கண்டனம்!

வடசென்னை கன்னிகாபுரம், 2ஆவது தெருவில் வசித்து வரும் மசூத்-சௌமியா தம்பதிக்கு கடந்த டிசம்பர் 5ஆம் தேதி குறைபிரசவம் ஆன நிலையில், வெள்ளம் காரணமாக போதய மருத்துவ உதவி கிடைக்காததால் குழந்தை இறந்தது. இந்த சம்பவம் நடந்து 5 நாட்களுக்கு பிறகு நேற்றைய தினம் (டிச.10) இறந்த குழந்தை அடக்கம் செய்யப்பட்டது.

அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் அடைத்து பெற்றோரிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்துள்ளது இணைய தளத்தில் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து பத்திரிகையாளரும், தொகுப்பாளருமான ஆவுடையப்பன் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக தனது x தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “Right to Die with Dignity” -Article 21-அடிப்படை உரிமை. நான் பல முறை தமிழ்நாட்டில் சிறப்பாக இருக்கும் மருத்துவகட்டமைப்பை பாராட்டி எழுதி இருக்கிறேன் ஆனால், அதே அரசு மருத்துவமனை இறந்த குழந்தையை, Shroud என சொல்லப்படக்கூடிய துணியில் கூட சுத்தி கொடுக்காமல் இப்படி அட்டை டப்பாவில் கொடுப்பது அவலம்,அவமானம்.Very sorry state of affairs எனகுறிப்பிட்டு இந்த ட்வீட்டை அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கு டேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது-

Views: - 331

0

0