பிரம்மாண்ட பேரணியில் துப்பாக்கிச்சூடு : இம்ரான்கான் உட்பட நிர்வாகிகள் காயம்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
3 November 2022, 6:00 pm

பாகிஸ்தானில் இம்ரான் கான் நடத்திய பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் இம்ரான் கான் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் , அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் வரிசாபாத் நகரில் இம்ரான் கான் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இம்ரான் கான் உள்பட அவரது கட்சி நிர்வாகிகள் காயம் அடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. காயம் அடைந்த இம்ரான் கான் மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!