இந்த நபர் அதிமுகவா…? அப்ப உடனே தூக்கு… திமுக மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு..!!!

Author: Babu Lakshmanan
18 April 2024, 7:30 pm

அதிமுக வாக்காளர்களை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளது” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு முன்வைத்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது :- நாங்கள் எப்பொழுது பண நாயகத்தை நம்பி இல்லை. ஜனநாயகத்தை நம்பி தான் இருக்கிறோம். பாஜக மற்றும் திமுக பணத்தை நம்பி தான் இருக்கிறார்கள். இந்த இரு கட்சியினரும் பணத்தின் மூலம் வாக்குகளை பெற்றுக் கொள்ளலாம் என நப்பாசையில் உள்ளனர்.

மேலும் படிக்க: திமுக ரூ.2,000…. அதிமுக ரூ.1,000…. பணப்பட்டுவாடா ஜரூர் ; பாஜகவினர் புகார்..!!!

கொள்ளையடித்த பணத்தைதான் வாக்காக மக்களிடம் வழங்கி வருகின்றனர். பொதுமக்கள் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு தேவையான வேட்பாளருக்கு வாக்கு செலுத்த உள்ளனர். வடசென்னையின் பொறுப்பாளராக நான் வடசென்னை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தேன்.

அதிமுக-விற்கு வாக்களிக்கும் நபர்களை குறி வைத்து வாக்காளர் பட்டியலில் அவருடைய பெயர் நீக்கப்படுகிறது.தேர்தல் அதிகாரிகள் இந்த தேர்தலில் அது போன்று நடைபெறாமல் தடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன், எனக் கூறினார்.

  • simbu next movie directed by vetrimaaran shooting spot photo leaked நெல்சன் சார், நீங்க என்ன இங்க? இணையத்தில் லீக் ஆன வெற்றிமாறன்- சிம்பு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்!