இந்த இடத்துக்கு வர நிறைய அவமானப்பட்டேன்: நிறைய கொடுமை நடந்துச்சு.. கண்கலங்கிய பிரபல நடிகர்..!

Author: Udayachandran RadhaKrishnan
8 January 2023, 1:06 pm
kuamaran-updatenews360
Quick Share

விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் AL விஜய் இயக்கத்தில் வெளியான இது என்ன மாயம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகராக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வெளித்தவர் நடிகர் குமரன். இவரை குமரன் என சொன்னால் தெரிவதை விட பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் என சொன்னால் தான் பலருக்கும் தெரியும்.

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடர் அண்ணன் – தம்பி பாசம், கூட்டு குடும்பம் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து நடக்கும் சண்டைகள், பாசம் போன்றவற்றை காட்டும் கதையாக மக்களை கவர்ந்து வருகிறது. இதில் நடிகர் குமரன், கதிர் என்னும் கதாபாத்திரத்தில் இல்லத்தரசிகள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

KUMARAN THANGARAJAN Updatenews360

இவர் மிகச்சிறந்த நடன கலைஞரும் ஆவார். இதனை தொடர்ந்து, சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான வதந்தி என்ற வெப் சீரியஸில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தனது கடும் உழைப்பின் மூலம் தற்போது பிரபலம் பெற்ற இவர், தனது சினிமா வாழ்க்கை பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அப்போது அவர் பேசியுள்ளதாவது, “ஆரம்ப காலங்களில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக கூட்டத்தில் 20 பேருடன் நின்று கொண்டு கைதட்டும் காட்சிகள் போன்றவற்றில் நடித்துக் கொண்டிருந்தேன். youtube சேனலில் நடிக்கும் வாய்ப்பை கூட அன்று பெரிய வாய்ப்பாக எண்ணி, அதிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினேன். அமேசான் ப்ரைம் வெப் சீரியஸில் நடிக்க முக்கிய காரணம், நான் சினிமாவில் கற்றுக் கொண்ட பாடங்கள் தான்” என்று கூறியுள்ளார்.

KUMARAN THANGARAJAN Updatenews360

“மேலும், நான் தேர்ந்தெடுத்து நடிக்கும் காட்சிகளில் நல்ல கதை மற்றும் விஷயம் இருக்கிறதா.. என்று மட்டும் தான் பார்ப்பேன். அப்டி இருந்தா உடனே நடிக்க சம்மதம் சொல்லிருவேன். சினிமாவில் இந்த இடம் கிடைக்க நிறைய போராடி தான் நான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்” என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Views: - 582

0

1