கணவரின் கொடுமையால் மூன்று முறை தற்கொலை முயற்சி செய்த ரேகா நாயர்!

Author: Shree
6 November 2023, 6:36 pm
rekha nair
Quick Share

பிரபல சர்ச்சையிக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பரவலாக முகமறியப்பட்டார். இவர் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த இவர் தொடர்ந்து சன், கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.

Rekha-Nair-updatenews360

இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி. சித்ராவின் தற்கொலை ரகசியங்களை குறித்து கூட பல யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார். அதன் பின்னர் இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் ஆபாச காட்சிகளில் அரைநிர்வாணமாக நடித்து சர்ச்சை ஏற்படுத்தினார். இதனால் அவரை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் மோசமாக விமர்சிக்க அவரை ரேகா அடித்து துவைத்ததெல்லாம் செய்தியாக வெளியானது.

இந்நிலையில் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில்,தனது திருமண வாழ்க்கை குறித்து விவாகரத்து குறித்தும் பேசிய அவர் ஒரு அதிர்ச்சி சம்பவத்தை கூறி அதிர வைத்தார். ஆம், தனக்கு நிறைய படிக்கவேண்டும் என்று ஆசை. நான் கலெக்டெர் ஆகவேண்டும் என்ற கனவில் ஐஏஎஸ் பரீட்சை எழுத டெல்லி சென்றேன். ஆனால், என் கணவர் என் படிப்பிற்கு தொடர்ந்து தடைவித்து கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவர் நான் டெல்லிக்கு செல்லக்கூடாது என்று எனது சான்றிதழ் அனைத்தையும் கழித்து விட்டார். அந்த சம்பவத்திற்கு பிறகு அவர் மீது எனக்கு அதிக வெறுப்பு உண்டாகி சண்டையிட்டு வந்தேன். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி 3 முறை தற்கொலை முயற்சி செய்துள்ளேன். அதன் பின்னர் தான் நான் அவரை விவாகரத்து செய்துவிட்டேன் என ரேகா நாயர் வேதனையை பகிர்ந்தார்.

Views: - 250

0

0