ரகுவரனுக்கு அமலா ஏன் ‘NO’ சொன்னார் தெரியுமா?.. இப்படி ஒரு பிளாஷ்பேக் இருக்கா..!

Author: Vignesh
5 April 2024, 6:03 pm
raghuvaran - updatenews360.png 3
Quick Share

தமிழ் சினிமா உலகில் மிக பிரபமாலான வில்லனாக இருந்தவர் ரகுவரன். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் முதன்முதலில் 1982 ஆம் ஆண்டு வெளியான அக்கா என்ற மலையாள படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

அதன் பின்னர் இவர் தமிழில் ஏழாவது மனிதன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

raghuvaran - updatenews360

மேலும், இவர் ஆரம்பத்தில் ஹீரோ மற்றும் துணை கதாபாத்திரத்தில் தான் நடித்து இருந்தார். அதன் பின்னர் இவர் வில்லனாக நடிக்க துவங்கினார். ஆனால், ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் தான் இவருக்கு நன்றாக பொருந்தியது. அதனால் தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
90ஸ் ரசிகர்களுக்கு நடிகர் ரகுவரன் ஒரு மிரட்டலான வில்லனாக இருந்தார்.

மேலும் படிக்க: அரண்மனை போல இருக்கே.. ஹைதராபாத்தில் 3-வது வீடு வாங்கிய நடிகை ராஷி கண்ணா..!

ரகுவரன் திரைப்பயணம்:

raghuvaran - updatenews360

மேலும், இவர் தமிழில் உள்ள ரஜினி, கமல், விஜயகாந்த் சரத்குமார், கார்த்தி என்று பல நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதனிடையே ரகுவரன் கடந்த 1996ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் படிக்க: நிறைமாத கர்ப்பிணியான அமலா பால்.. எளிமையாக நடந்த வளைகாப்பு.. அழகிய புகைப்படங்கள்..!..!

raghuvaran - updatenews360

நடிகை ரோகிணியும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக தான் திகழ்ந்து வந்தவர். திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷிவரன் என்ற குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

ரகுவரன் மறைவு:

raghuvaran - updatenews360

பிரிவிற்கு பின் நடிகர் ரகுவரன் கவனிக்க ஆளில்லாமல் தனியாகத்தான் வசித்து வந்தார். பின்னர் 2008 ஆம் ஆண்டு சர்க்கரை நோய் காரணமாக நடிகர் ரகுவரன் உயிர் பிரிந்தார். இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் பலர் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.

ரகுவரன் காதல்:

raghuvaran- updatenews360

ரகுவரன் நடிப்பில் 1987 -ம் ஆண்டு கூட்டுப் புழுக்கள் என்ற படம் வெளியானது. இதில் நடிகை அமலா கதாநாயகியாக நடித்திருப்பார். கூட்டுப் புழுக்கள் படத்தின் போது ரகுவரனுக்கு அமலா மீது காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

raghuvaran- updatenews360

அப்போது அவரின் காதலை ரகுவரன் அமலாவிடம் தெரிவித்தாராம். அதற்கு அமலா உங்கள பார்த்தா எனக்கு வில்லன் ஞாபகம் தான் வருது, உங்க காதலை என்னால ஏத்துக்க முடியல என்று முகத்துக்கு நேராகவே கூறி மறுப்பு தெரிவித்து விட்டதால், ரகுவரன் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளானராம். இதனால் ரகுவரன் மிகுந்த மன உளைச்சலில் அந்த சமயத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து 1993 -ம் ஆண்டு அமலா நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Views: - 93

0

0