புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சைலண்டாக உதவிய அஜித்- புகழ்ந்து தள்ளிய பயில்வான்..! (வீடியோ)

Author: Vignesh
14 December 2023, 5:09 pm
ajith-updatenews360
Quick Share

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மீக்ஸாம் புயலால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் தங்களுடைய வீட்டையும் பொருட்களையும் இழந்து ஒரு வேளை சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டப்பட்டனர்.

அரசு ஒரு பக்கம் முன்னேற்பாடு செய்து மறுபக்கம் திரைத்துறை பிரபலங்கள் சமூக ஆர்வலர்கள் பலரும் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவினார்கள். அந்த வகையில், விஜய் டிவி பிரபலம் கே பி ஒய் பாலா அரிசி மூட்டை மற்றும் 200 பேருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து அசத்தினர்.

அவரை தொடர்ந்து நடிகர் ஆதி சாப்பாடு வாங்கி கொடுத்தார். கலா மாஸ்டர் பால் பாக்கெட் மற்றும் உணவு வாங்கி கொடுத்துள்ளார். இதுபோல பல நடிகர்களும் அவர்களுடைய ரசிகர்களுக்கு உணவுகளை கொடுத்தனர்.

விஜய் தன்னுடைய மக்கள் இயக்கத்தின் மூலம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கு சாப்பாடு மற்றும் தன்னால் முடிந்த காசுகளையும் கொடுத்து உதவி செய்தார். அஜித், விஷ்ணு விஷால் போன்ற நடிகர்கள் மட்டுமே உதவி செய்யவில்லை. ஏழைகளை கைவிட்டு விட்டனர் என சோசியல் மீடியாக்களில் பூதாகரமாக வெடித்தது.

ajith

இந்நிலையில், அஜித் செய்த உதவி குறித்து பயில்வான் பேசி உள்ளார். அதாவது, 100 பேரை வீட்டில் தங்க வைத்து மூன்று நாட்கள் சாப்பாடு போட்டு, அவர்கள் வீட்டுக்கு செல்லும் பொழுது ஒவ்வொருவருக்கும் சுமார் 10,000 வழங்கியுள்ளதாகவும், எந்த ஒரு கொடியும் ஸ்டிக்கரும் இல்லாமல் அஜித் இதனை சைலன்டாக செய்து இருக்கிறார் என பயில்வான் பெருமையாக பேசியுள்ள இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Views: - 365

0

0