ஷூட்டிங்கில் பிச்சைக்காரனுடன் படுக்க வைத்த இயக்குனர்.. கடுப்பான அஞ்சலி.. அட.. இந்த படமா?..

Author: Vignesh
6 March 2024, 1:04 pm
Quick Share

2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகை அஞ்சலி ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.

anjali-updatenews360

தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார். தற்போது, மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து அதன் பிறகு release ஆகி ஓடாமல் போய்விட்டது. அதன்பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வந்த “லவ் பண்ணா விட்டிரனும்” குறும்படம் ஒன்றிலும் “நிசப்தம்” என்னும் வெப் சீரிஸ்லும், நடித்தார். தற்போது, அஞ்சலி தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இடையில் நடிகர் ஜெயுடன் லிவிங் வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், அந்தக் காதலும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தது. மேலும், தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் தற்போது, சினிமாவில் கவனம் செலுத்துவரும் அஞ்சலி இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து, கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பறிபோன பட வாய்ப்புகளை மீட்டெடுக்க கவர்ச்சி ரூட்டுக்கு தாவியுள்ளார்.

முன்னதாக, அஞ்சலி கேரியரில் மிக முக்கிய படங்களில் ஒன்று அங்காடித்தெரு இப்படத்துக்கு, இவர் வெளிப்படுத்திய நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்று சொல்லலாம். இப்படத்தின், கதை அஞ்சலிக்கு சரியாக இருக்கும் என்பதால் தான் வசந்த பாலன் அவரிடம் கூறியுள்ளார். கதையை கேட்டு அஞ்சலி உடனே ஓகே சொல்லிவிட்டாராம். இப்படத்தில், ஒரு குறிப்பிட்ட காட்சியில் அஞ்சலி பிச்சைக்காரருடன் சாலையில் படுத்திருப்பது போன்ற காட்சி இடம் பெற்று இருக்கும். இந்த காட்சியை படமாக்கும் போது அஞ்சலிக்கு, பிச்சைக்காரர்களுடன் சாலையில் படுக்க பிடிக்கவில்லையாம். இதனால், படு கோபத்தில் இருந்தாராம் அஞ்சலி. ஆனால், படம் வெளியாகி அந்த காட்சியை பார்த்த பிறகு அவரின் மனம் மாறிவிட்டதாம்.

Views: - 80

0

0