பொண்டாட்டிக்கு துரோகம் செய்து நடிகையுடன் கொண்டாட்டம்.. சீரியல் நடிகரை திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..!

Author: Vignesh
14 November 2023, 2:56 pm
vijay tv serial -updatenews360
Quick Share

சன்டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி டிவி சீரியலில் நடித்து பிரபலமானவர் திவ்யா. மேலும் அர்னவ் உடன் சேர்ந்து திவ்யா’ கேளடி கண்மணி’ சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானார்கள். அப்போது ஏற்பட்ட நெருக்கம் காதலாக மாறி இருவரும் ரகசிய திருமணம் செய்துக்கொண்டார்கள். ஏற்கனவே திவ்யா வேறொருவருடன் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் அவருக்கு ஒரு மகளும் இருக்கிறார்.

திவ்யா அர்னவின் குழந்தையை வயிற்றில் சுமந்து வந்தார். எவ்வளவோ பேசியும் காதலை தெரிவித்தும் அர்னவ் புறிந்துக்கொண்டு திவ்யாவை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் அர்னவ் தற்போது சீரியல் நடிகை அன்ஷிதா என்பவரை காதலித்து வருகிறார். இதனால் கடுங்கோபமடைந்த திவ்யா அர்னவ் மீது வழக்கு தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். அர்னவ் ஜாமினில் வெளியில் வந்துவிட்டார். இருந்தும் தன்னை புரிந்துக்கொண்டு ஏற்றுக்கொள்ளவில்லை என திவ்யா மனம் வருந்தி கூறி வந்தார்.

இதையடுத்து திவ்யா அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தையின் அழகான போட்டோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார் திவ்யா. இதை பார்த்த ரசிகர்கள் இனிமேலாவது அர்னவ் சேர்ந்து வாழ்வரா? ஈகோவை விட்டு விட்டு குழந்தையை வந்து பாருங்கள் மனைவியுடன் மகிழ்சியாக வாழுங்கள். இப்படி ஒரு தேவதை பிறந்தும் மனம் மாறாத அரக்கனாக இருக்கும் அரன்வை பலர் திட்டி தீர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை அன்ஷிதாவுடன், அர்ணவ் தீபாவளி கொண்டாடிய வீடியோ வெளியான நிலையில், இதை பார்த்த ரசிகர்கள் கடுமையாக அர்ணவை திட்டி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

Views: - 188

0

0