அது உடனே நடக்கணும்னா நயன்தாரா இடுப்புல கை வைக்கணும் – ஆர்யாவின் பேச்சால் சர்ச்சை!

Author: Shree
12 October 2023, 5:33 pm
nayanthara
Quick Share

இளம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆர்யா கட்டுமஸ்தான உடல் தோற்றம், மிரட்டலான body language என ஆரம்பத்தில் வில்லனாக நடித்து பரீட்சியமனார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது நடிப்பு திறமையை வளர்த்துக்கொண்டு முன்னணி ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார்.

2005ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஆர்யா தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஆர்யா இளம் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு அழகான ஒரு மகளும் இருக்கிறார்.

தொடர்ந்து திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். கடைசியாக இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.’ படத்தில் கரடுமுரடான கிராமத்து இளைஞனாக நடித்திருந்தார். இந்த படம் ஓரளவுக்கு ஓடினாலும் பெரிதாக பேசப்படவில்லை. அடுத்ததாக ஆர்யா சைந்தவ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ராஜா ராணி படத்தின் ப்ரோமோஷன் போது பேட்டிகளில் கலந்துக்கொண்ட ஆர்யா- நயன்தாரா பல விஷயங்கள் குறித்து பேசினார்கள். அப்போது ஆர்யாவிடம், நயன்தாராவை உடனே சிரிக்க வைக்கவேண்டும் என்றால் என்ன செய்வீங்க என கேட்டதற்கு ” அதுக்கு நயன்தாரா இடுப்பு கிள்ளிவிட்டால் போதும் என விளையாட்டாக கூறினார். இருந்தாலும் பொதுவெளியியல் இப்படியா பேசுவது? என பலர் விமர்சித்தனர்.

Views: - 396

0

0