ஊருக்கு நாலு பேரு இப்படி இருந்தால்… அட்லீயை தூக்கி வச்சி கொண்டாடும் தமிழ் மக்கள்!

Author: Rajesh
25 February 2024, 10:45 am
atlee
Quick Share

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. இவர் ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் கொடுக்க இளம் வெற்றி இயக்குனராக வலம் வந்தார். அதை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் என்ற இடத்தை பிடித்தார்.

atlee kumar

அதையடுத்து அண்மையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டுள்ளார். இவர் நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 8 வருடங்களுக்கு பிறகு அண்மையில் தான் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அட்லீ தொடர்ந்து திரைப்படம் இயக்குவதில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

பாலிவுட்டிற்கு சென்று அங்கு அறிமுக படமே மெகா ஹிட் கொடுத்ததால் அட்லீயின் மார்க்கெட் வேற லெவலுக்கு சென்றுவிட்டது. ஜவான் படத்தை இயக்கி ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் கொடுத்த அட்லீக்கு சல்மான் கான் தனது படத்தை இயக்க அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளிவருகிறது. இப்படியான நேரத்தில் அட்லீயை சுற்றிவளைத்து நேர்காணல் எடுத்து வருகிறது பாலிவுட் சேனல்கள்.

அப்படி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அட்லீயிடம் ஆங்கர் அடுக்கடுக்காக இந்தியில் கேள்வி கேட்க, அட்லீ வேற மாதிரி தக் லைஃப் ரிப்ளை கொடுத்திருப்பது தான் தற்போது கோலிவுட் சினிமாவின் தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது. ஆம், தொடர்ந்து இந்தியில் அடுக்கடுக்கான கேள்வி கேட்ட ஆங்கரை பார்த்து ‘நான் நல்லா இருக்கேன்… நீங்க எப்படி இருக்கீங்க’ என தமிழில் பதில் சொல்ல அந்த அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது. இதை கேட்ட தமிழ் ரசிகர்கள்… ” ஊருக்கு நாலு பேரு இப்படி இருந்தால் எவனாலும் ஒன்னும் பண்ணமுடியாது என கருத்து கூறி வருகிறார்கள்.

Views: - 103

0

0