இமான் பத்தி பேச கூடாதுன்னு கண்டிஷனா போடுற?.. இவரு பெரிய யோகிய சிகாமணி.. SK-வை அலறவிட்ட பிரபலம்..!

Author: Vignesh
6 January 2024, 6:11 pm
imman-sivakarthikeyan
Quick Share

ஒரு சில மாதங்களாக அவ்வப்போது இணையதளத்தில் இமான் குறித்த சர்ச்சை எழுந்து தான் வந்து கொண்டிருக்கிறது. அதாவது, சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக இசையமைப்பாளர் இமான் ஒரு பேட்டி ஒன்றில், குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டது.

sivakarthikeyan-updatenews360

தற்போது, வரை இமான் பேச்சுக்கு சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை. சமீபத்தில், அவர் கலந்து கொண்ட பேட்டிகளிலும் கூட இமான் பற்றி வாய் திறக்கவில்லை. தன் மீது எழுந்த குற்றச்சாட்டுக்கு விளக்கமும் அளிக்கவில்லை.

இந்நிலையில், இது குறித்து, பேசிய பிரபல விமர்சகர் பிஸ்மி, சிவகார்த்திகேயன் உண்மையில் மகிழ்ச்சியாக இருப்பது போல் நடிக்கிறார். உண்மையில் இமான் விவகாரம் தெரிந்த பிறகு அவரது வீட்டில் பூதாகரமாக பிரச்சனை வெடித்திருக்கும் ஆனால் கணவன் மனைவிக்கு இடையே நீண்ட நாட்கள் சண்டை நீடிக்காது என்பதால் உடனே சமாதானம் ஆகியிருப்பார்கள். ஆனால், நிச்சயம் சண்டை வந்திருக்கும் அதையெல்லாம் காட்டிக்கொள்ளாமல் நடிக்கிறார் என பிஸ்மி தனது கருத்தினை ஆணித்தரமாக கூறி இருந்தார்.

imman sivakarthikeyan

மேலும், பேட்டியில் அயலான் படத்தை மட்டுமே பேசி வருவதாகவும், இமான் பிரச்சனை குறித்து கேள்விகள் கேட்க வேண்டாம் என சிவகார்த்திகேயன் கண்டிஷன் போட்டுள்ளதாகவும், கண்டிஷன் போட்டு சத்தியமும் வாங்குகிறார். அதன்பின் தான் பேட்டி எடுக்க கூப்பிடுகிறார். இதனால் தான் அவர்களால் அதைக் கேட்க முடியவில்லை. ஏற்கனவே, பல கண்டிஷன் போட்டதாலும் அவர்களால் கேள்வி கேட்க முடியாமல் போவதாகவும், இவர்கள் கேட்காத காரணத்திற்காக அந்த சம்பவங்கள் எல்லாம் பொய் என்றோ சிவகார்த்திகேயன் யோக்கிய சிகாமணி என்று அர்த்தம் கிடையாது. சிவகார்த்திகேயன் அட்லியின் புகழ் பாட காரணமே பாலிவுட் வரை செல்ல வேண்டும் அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைதான் என தெரிவித்து இருக்கிறார்.

Views: - 297

0

0