திருமணமான 7 நாட்களில் விஷம் குடித்த பிரபல நடிகை : புது வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?

Author: Udayachandran RadhaKrishnan
5 January 2023, 3:45 pm
Marirage - Updatenews360
Quick Share

தற்போது இருக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பலருமே தன்னுடைய வாழ்க்கையில் காதல் திருமணத்தை மட்டுமே செய்து வருகிறார்கள்.
எப்போதுமே தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது அனைவருக்கும் பிடித்தமாக இருக்க காரணமே தேவை இல்லாமல் பல நிகழ்வுகள் நடக்கும் என்பது தான், அதில் தான் பிக்பாஸ் சீசன் 7 ல் நடிகை சைத்ரா கோட்டூர் கலந்து கொண்டு உள்ளார்.

ஆனால் சைத்ரா 77வது நாளில் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். கன்னட திரையுலகில் முக்கியமாக பணியாற்றியவர். சைத்ரா 2019 ஆம் ஆண்டு மௌனேஷ் படிகரின் சூஜிதாரா மூலம் நடிகையாக அறிமுகமானார்.

ஆனால் இப்போது வரை ஒரு சில திரையில் மட்டும் தான் நடித்து வருகிறார். பல நபர்களுக்கு பல செயல்கள் நடந்து வருகிறது, அந்த வகையில் தன் காதலுடன் இருக்கும்போது தேவையில்லாத புகைப்படத்தை எடுப்பது போன்ற பல செயல்கள் நடந்து வருகிறது.

பல காலமாகவே தமிழ் திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகளும் சரி சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளும் சரி காதலித்து திருமணம் செய்வதையே வழக்கமாகவே வைத்துள்ளார்கள்.

ஆனால் ஒரு சில வருடத்தில் அந்த காதல் வாழ்க்கை காணமல் போய்விடுகிறது. ஆனால் தற்போது வரை அப்படி காதல் திருமணம் செய்து ஒரு நல முறையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் பிரபலங்களும் இருக்கிறார்கள் ஆனால் அதே காதல் திருமணம் செய்து சில நாளில் பிரிந்து போனவர்களும் இருக்கிறார்கள். தற்போது அந்த வகையில் நமது கன்னட பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்ட நடிகை தான் சைத்ரா.

சின்னத்திரையில் அனைவருக்கும் பரிச்சியமான நடிகை தான் சைத்ரா, சின்னத்திரையில் பல பிரபலமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உள்ளார்.

ஆனால் தற்போது நடிகை சைத்ரா தன்னுடைய சின்னத்திரை வாழ்க்கையில் இருந்து சமீபத்தில் காதல் வாழ்க்கையில் நுழைந்துள்ளார், அந்த வகையில் நாகார்ஜூனன் என்ற ஒரு பிரபலமான தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.

சில வருடமாகவே இருவருமே நெருக்கமாக காதலித்து வந்தார்கள். நன்றாகவே சென்று வந்த இவரின் வாழ்வில் ஏன் இப்படி ஒரு முடிவினை எடுக்க வேண்டும் என அனைவரும் கேட்டு வரும் நிலையில், அதற்கும் பதில் கிடைத்துள்ளது.

நடிகை சைத்ராவை காதலிப்பது போல காதலித்து திருமணமும் செய்து வந்த நகர்ஜூன் தன் காதல் மனைவி கூட காதலிக்கும்போது இருவரும் சேர்ந்து எடுத்த அந்த மாதிரியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளார். ஆனால் அனைத்தையும் காதல் கணவர் நாகர்ஜுன் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தி சமீபத்தில் கூட மிகவும் அதிகமாக பேசப்பட்டது, மேலும் சைத்ராவின் வீட்டுக்கு வந்த நாகர்ஜூனின் குடும்பத்தினர், தங்களுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றும், அதனால் கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது.

இப்படி பட்ட ஒரு நிலைமையில் தான் நடிகை சைத்ரா தன் வாழ்க்கையில் காதலிக்கும் முன் நடந்தது மற்றும் காதலித்த பின்னர் காதலன் இப்படி செய்ததை நினைத்து பினாயிலை குடித்துள்ளார்.

இந்த ஒரு நிலைமையில் தான் அவரை அவருடைய குடும்பத்தினர் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Views: - 400

0

1