ஆசைய காத்துல தூது விட்டு.. ஆசைக்கு அடிபணியாத பாடகிகளுக்கு கண்டிஷன் போட்டு கதறவிடும் பிரபலம்..!

Author: Vignesh
1 December 2023, 12:45 pm
vairamuthu bhuvana-updatenews360
Quick Share

பிரபல பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி, நடிகரும் இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை 2014-ல் திருமணம் செய்து கொண்டார். ரவீந்திரன் வணக்கம் சென்னை படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருப்பார்.

chinmayi vairamuthu-updatenews360

சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சையான கருத்துகளால் ரசிகர்களின் கவனம் ஈர்ப்பவர் தான் பாடகி சின்மயி. தனது முதல் பாடலிலேயே சிறந்த பாடகி என்ற முத்திரையை பதித்தார் சின்மயி, அடுத்தடுத்து பல படங்களில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் தொடர்ச்சியாக பாடல்களை பாடினார். இசைத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார்.

chinmayi vairamuthu-updatenews360

இதனிடையே, பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து வைரமுத்துவிற்கு எதிரான கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் சின்மயி.

chinmayi vairamuthu-updatenews360

பலமுறை வைரமுத்து குறித்து மோசமான கருத்துக்களை சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு அவரை திட்டியுள்ளார். இந்நிலையில், சின்மயிடம் செய்தியாளர்கள், அப்போதே சொல்லி இருக்கலாமே என்றும் அவரை திருமணத்திற்கு அழைத்து அவரிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வியை எழுப்பிய நிலையில், பெரிய அரசியல் பலம் வைரமுத்துவிடம் இருந்ததால் அதை அப்போது கூற முடியவில்லை என்று சின்மயி பதிலளித்து இருந்தார். சின்மயிக்கு பிறகு தான் பல நடிகைகள் மீ டூ மூலம் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை வெளியில் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

singer chinmayi - updatenews360

இந்நிலையில், வைரமுத்து மீது சில ஆண்டுகளுக்கு முன்னர் சின்மயி புகார் கொடுத்ததை தொடர்ந்து அவர் மீது பல பெண்களும் புகார் அளித்து வந்தனர். இதனிடையே, சில வருடங்களுக்கு முன்பு பிரபல பாடகியான புவனா சேஷன் என்பவரும் வைரமுத்து மீது புகார் அளித்திருந்தார். தற்போது, அவர் பகிர்ந்து உள்ள செய்தி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

vairamuthu-updatenews360

அதாவது வைரமுத்து ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கும்போதே அவரின் ஆசைக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்ற கண்டிஷன் போடுவாராம். அதை செய்யவில்லை என்றாலோ அல்லது வாய்ப்பே வேண்டாம் என்று தெரிவித்து வெளியேறி விட்டாலும் அதன் பின்பு சினிமாவில் அவர்கள் எங்கேயும் போய் பாட முடியாது அளவிற்கு அவர்களை பழிவாங்கி விடுவாராம். வைரமுத்து குறித்து புவனா சேஷன் கூறியுள்ள இந்த விஷயம் நெட்டிசன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 173

0

0