எதையும் மறக்க மாட்டேன்.. வம்புல சிக்க மாட்டேன்..-மாஜி கணவர் குறித்து சமந்தா ஓபன் டாக்..!

Author: Vignesh
11 April 2023, 4:40 pm
Quick Share

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

அதையடுத்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இருவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். இதற்கு காரணமே ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் சர்ச்சையான படுக்கையறை காட்சிகளில் நடித்தது தான் என கூறப்பட்டது.

இதனிடையே அவர் திடீரென மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். உடல் நலம் தேறியதும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் நாக சைதன்யா ரூ. 15 கோடிக்கு புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக நம் இணையதள செய்தியில் பார்த்தோம். தற்போது கிடைத்துள்ள புதிய தகவலின் படி அந்த வீடு சமந்தா வீட்டின் அருகிலேயே தான் இருக்கிறதாம்.

இதை அறிந்த ரசிகர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாக சைதனையாவுக்கு சமந்தா மீது இருக்கும் காதால் இன்னும் அப்படியே தான் இருக்கு. அவரை அருகில் இருந்தது பார்ப்பதற்காக தான் சமந்தா வீடு பக்கத்திலே வீடு வாங்கிருக்கிறார் என கூறி வருகிறார்கள்.

அதுமட்டும் அல்லாமல் விவாகரத்து ஆன பிறகு கூட நாக சைதன்யா இன்னுமும் சமந்தா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் இருந்து நீக்கவே இல்லை என்பது அவர்கள் காதல் இன்னுமும் வாழ்வதற்கு அடையாளம்.

இதனிடையே, சமீபத்தில் நாக சைதன்யா சோபித துலிபாலாவை டேட்டிங் செய்வதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கடந்த கால அனுபவங்களில் எதையாவது மறக்க விரும்புகிறீர்களா என சமந்தாவிடம் கேட்கப்பட்டதற்கு, தன் கடந்த கால ரிலேஷன்ஷிப் பற்றி கேட்கிறீர்களா என பதிலுக்கு கேள்வி கேட்டார் சமந்தா. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று பேட்டி எடுத்தவர் தெரிவித்தார்.

நீங்கள் என்னை வம்பில் சிக்க வைக்கிறீர்கள் என்றும், தான் எதையுமே மறக்க விரும்பவில்லை என்றும், ஏனென்றால் அனைத்துமே தனக்கு ஏதாவது பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறது எனவும், அதனால் மறக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

samantha

சமந்தா பொதுவாக பதில் அளித்தாலும் அவர் நாக சைதன்யாவுடன் வாழ்ந்தது பற்றி தான் பேசியிருக்கிறார் என்கிறார்கள் ரசிகர்கள். அதே சமயம் மீண்டும் அவருடன் சேர்ந்து வாழும் பேச்சுக்கே இடமில்லை என்பதை தெளிவாக கூறிவிட்டார்.

Views: - 288

0

0