எனக்கு கதாநாயகிகள் மீது அதீத அன்பு… அதனால் தான் – முதன்முறையாக வெளிப்படையாக கூறிய பாலா!

Author: Shree
22 August 2023, 12:42 pm
director bala
Quick Share

தமிழ் சினிமாவின் விசித்திர இயக்குனர் பாலா சேது படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்தார். தொடர்ந்து நந்தா, பிதா மகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை , நாச்சியார் உள்ளிட்ட தரமான படங்களை இயக்கி தேசி விருதுகளை வாங்கியுள்ளார்.

பொதுவாக படம் என்றால் ஹீரோ ஆக்ஷன், ஹீரோயின் அழகு, காதல், ரொமான்டிக் என படமே கலர்ஃபுல்லாக இருக்கும். ஆனால், இவருடைய படத்தைப் பொருத்த வரை அழுகை, அழுக்கு, கருப்பு என்று வித்தியாசமான கோணத்தில் இருக்கும். இதுவே இவரது தனித்துவமான ஸ்டைல்.

அது மட்டும் இல்லாமல் பாடலுக்காக படம் இல்லை. படத்தில் பாடல்கள் ஒன்று , இரண்டு இருந்தால் போதும் என்று ஒட்டு மொத்த சினிமாவின் நிலைமையை மாற்றி வேறு கண்ணோட்டத்தில் கதையை கடைசி வரைக்கும் ஸ்வாரஸ்யமாக கொண்டுச்சென்று பார்க்க வைத்தவர் இயக்குனர் பாலா. சிறந்த இயக்குனர் என பெயர் எடுத்தாலும் தொடர்ந்து தன் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை நல்ல நடிப்பு வரவைக்க கொடுமை படுத்துவதாக பல நடிகர் நடிகைகள் புகார் கொடுத்துள்ளனர்.

இதனிடையே இவரது மனைவி முத்து மலர் அண்மையில் தான் பாலாவை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். முத்து மலர் வேறொரு அரசியல்வாதி மகனுடன் தொடர்பில் இருந்ததாகவும் அதனால் தான் விவாகரத்து செய்ததாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இயக்குனர் பாலா சமீபத்திய பேட்டி ஒன்றில், தன்னுடைய படங்களில் ஹீரோயின்கள் கொல்லப்படுவது போன்று காட்டுவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், எனக்கு நடிகைகள் மீது அதீத அன்பு அதனால் தான் அவர்களை அப்படி காட்டுகிறேன் என குதர்க்கமாக பதில் அளித்துள்ளார். ஒருவேளை ஹீரோயின்கள் மீது அலாதி பிரியம் வைத்திருந்ததால் தான் மனைவி மனக்கசப்பால் பிரிந்துவிட்டாரோ என நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Views: - 946

5

0