இளையராஜா சொன்ன ஒரே ஒரு வார்த்தை… அவமானத்தால் தமிழ் சினிமாவை விட்டு விலகிய பிரபல பாடகர்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2023, 6:30 pm
Ilayaraja - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்ற பங்கு இளையராஜாவுக்கு உண்டு. அவர் அமைத்த பாடல்கள் உலகத்தையே ரீங்காரமிடச் செய்தது என்று கூறினால் அது மிகையல்ல.

அவருடைய இசையில் பாடத் தவம் கிடந்த எத்தனேயோ பாடகர்கள் உள்ளனர். அவர் அறிமுகம் செய்த எத்தனையோ பாடகர்களும் உள்ளனர்.

அந்த வகையில் மலையாளத்தில நடிகர், பாடகராக இருந்த கிருஷ்ணசந்தரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இளமையான குரல் வளமுடைய கிருஷ்ணசந்தர் பாடிய தமிழ் பாடல்களும் இன்றளவும், இசைக்கு மயங்கியவர்களை மயக்க செய்யும்.

தனது வசீகர குரலால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். அவர் பாடிய ஏதோ மோகம், பூ வாடை காற்று, தென்றல் வந்து போன்ற பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளது.

ஆனால், ஒரு சில காரணங்களால் தமிழ் சினிமாவில் பாடுவதை தவிர்த்து விட்டார். அதுக்கு இளையராஜாவும் ஒரு காரணம், அவர் தான் அறிமுகப்படுத்தி வைத்தார். ஆனால் இதுவரை கிருஷ்ணசந்தரை நன்றாக பாடியதாக பாராட்டியதே கிடையாது.

அதே சமயம் கிருஷ்ணசந்தர் நடிகராகவும் தனது பணியை தொடர்ந்துள்ளார். ஒரு நாள் பாடல் பதிவின் போது, கிருஷ்ணசந்தர் குரல் வளம் இல்லாமல் போய்விட்டது. உடனே அவர் இரண்டு கப்பல்களையும் கால் வைத்தால் இப்படித்தான் இருக்கும், ஒரு கப்பலில் மட்டும் பயணம் செய்ய வேண்டும் என கண்டிப்போடு கூறிவிட்டார்.

அதனால் தமிழில் பாடுவதை தவிர்த்த அவர், தொடர்ந்து மலையாள படங்களில் நடிகராகவும், பாடகராகவும் தொடர்ந்தார்.

வெகுநாள் கழித்து பசும்பொன் படத்தில் தாமரைப் பூவுக்கும் பாடலை பாடி மீண்டும் தமிழ் பாடல்களை பாடினார். இந்த தகவலை அவரே தமிழ் தொலைக்காட்சியில் பாடகர் மனோ நடத்திய நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

Views: - 815

7

6