கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!
Author: Prasad20 June 2025, 5:46 pm
கூலி பற்றி பரவிய தகவல்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சௌபின், சத்யராஜ், உபேந்திரா, நாகர்ஜுனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் நிலையில் அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் “கூலி” திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் குறித்து ஒரு தகவல் சில நாட்களாகவே இணையத்தில் வைரல் ஆகி வந்தது. அதாவது “கூலி” திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் ரூ.75 கோடிக்கு வியாபாரம் ஆகிவுள்ளதாக ஒரு தகவல் பரவி வந்தது. இதனை ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தோடு பகிர்ந்து வந்தனர். இதுதான் இதுவரை வெளிநாட்டு உரிமம் விற்பனையான்னதில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட திரைப்படம் என பலரும் வியப்போடு இத்தகவலை பகிர்ந்துகொண்டு வந்தனர். ஆனால் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய பத்திரிக்கையாளர் பிஸ்மி, இத்தகவல் பொய் என கூறியுள்ளார்.
கூலியை ஓவர்டேக் செய்த ஜனநாயகன்
அந்த வீடியோவில் பேசிய பத்திரிக்கையாளர் பிஸ்மி, “கூலி படத்தின் வெளிநாட்டு உரிமம் இன்னும் வியாபாரம் ஆகவில்லை. இத்திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமத்தை விலைக்கு வாங்க ஃபார்ஸ் பிலிம்ஸும் ஐங்கரன் நிறுவனமும் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் ஆக்ஸ்ட் 14 அன்று வார் 2 என்ற பாலிவுட் படம் வெளியாகிறது. இதில் ஹிரித்திக் ரோஷனும் ஜூனியர் என்டிஆரும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
வெளிநாட்டு உரிமம் என்று வரும்போது ஹிந்தி படங்களுக்குதான் முன்னிரிமை. அதற்கு பிறகுதான் பிராந்திய மொழிகளுக்கு வருவார்கள். இந்த நிலையில் வார் 2 திரைப்படம் வெளிவருவதால் கூலி திரைப்படத்திற்கு பெரிய விலை கிடைக்கவில்லை. இதுதான் உண்மை” என கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “உண்மையில் ஜனநாயகன் திரைப்படம் வெளிநாட்டு வியாபாரத்தில் மிகப்பெரிய அளவுகோலை உருவாக்கியுள்ளது. அதாவது ஜனநாயகன் திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமத்தை ஃபார்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் ரூ.80 கோடிக்கு வாங்கியுள்ளது. அதே போல் ரூ.80 கோடிக்கு வாங்கிய ஃபார்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து மலேசியா விநியோகஸ்தர் ஒருவர் ஜனநாயகன் திரைப்படத்தின் மலேசிய திரையரங்கு உரிமத்தை ரூ.12 கோடிக்கு வாங்கியுள்ளார். இதுவரை மலேசியாவில் இவ்வளவு கோடி விலை கொடுத்து தமிழ்படத்தை யாரும் வாங்கியதில்லை” எனவும் பிஸ்மி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.