குடி போதையில் தள்ளாடிய குஷ்பூ.. தாங்கி சென்ற இளம் நடிகர் குறித்து ஷாக் கொடுத்த பிரபலம்..!

Author: Vignesh
13 March 2024, 6:11 pm
kushboo
Quick Share

தமிழ் சினிமாவின் பப்ளி நடிகையான குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். குஷ்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். சுந்தர் சி தற்போது அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

This image has an empty alt attribute; its file name is kushboo.jpg

தற்போது, சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வரும் குஷ்பு, அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். கொரோனா காலகட்டத்தில் 53 வயதாகும் குஷ்பு உடல் எடையை அதிகம் குறைத்து ஒல்லியாக மாறியது ரசிகர்கள் எல்லோருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார். இவர் தொடர்ந்து தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

kushboo

இந்நிலையில், பிரபல பத்திரிகையாளரான தமிழா தமிழா பாண்டியன் இணையதளத்தில் அளித்த பேட்டி ஒன்றில் குஷ்பூ குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருப்பது பலருக்கும் அதிர்ச்சியாக உள்ளது. அதாவது, ஒரு நாள் குஷ்பூ சென்னையில் இருக்கும் ஒரு ஹோட்டலில் மதுபோதையில் தள்ளாடியபடி வந்திருக்கிறார். அந்த நேரத்தில், ஓடி வந்த இளம் நடிகர் ஒருவர் குஷ்புவை பிடித்து கார் வரை அழைத்து சென்று காரிலும் ஏற்றி விட்டிருக்கிறார்.

kushboo - updatenews360

அதன் பின்னர், கார் வேகமாக சென்றதை, என் கண்ணால் பார்த்தேன் என்றும், அவர் இல்லை என்று சொன்னால் என் மீது வழக்கு போடுங்கள் என்று தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்திருக்கிறார். அப்படி இருந்த குஷ்பூருக்கு இன்று தேசிய மகளிர் ஆணைய தலைவியாக பொறுப்பு என்றும் விமர்சித்து பேசி இருக்கிறார்.

kushboo
Views: - 57

0

0