அந்த படத்துல அந்த மாதிரியான காட்சியில் நடிக்க அவங்கதான் வேணும்… இயக்குனரிடம் அடம்பிடித்த உச்ச நடிகர்..!

Author: Vignesh
23 February 2023, 5:30 pm
Quick Share

தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ளவர் நடிகர் கமல்ஹாசன். உலக நாயகனாக இருந்து வரும் அவருடன் இணைய பல நடிகைகள் இன்னும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், கமல் நடிப்பில் வெளியான மூன்றாம் பிறை படத்தில் ஆரம்பித்து தற்போது கேப்டன் மில்லர் படம் வரையில் பிஸியான படங்களை தியாகராஜன் தயாரித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து பல வெற்றிகளை கொடுத்தவர். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தினை டி ஜி தியாகராஜன் தான் தலைமை ஏற்று நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Kamal- Updatenews360

சமீபத்தில் தியாகராஜன் அளித்த பேட்டியொன்றில் கமல் ஹாசன் பற்றி சில சுவாரஸ்யமான விசயங்களை பகிர்ந்து உள்ளார். தான் நடிக்கும் கதையில் இந்த நடிகைகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நடிகைகளின் தேர்வும் செய்வதில், கமல் மிகவும் கவனம் செலுத்துவாராம்.

moondram pirai - updatenews360

அப்படி ஒருமுறை இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் மூன்றாம் பிறை படம் கமல், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா போன்ற நட்சத்திரங்கள் கூட்டணியில் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

moondram pirai - updatenews360

மூன்றாம் பிறை படத்தில் நடிகை ஸ்ரீதேவி தான் வேண்டும் என்று கமல் ஹாசன் கூறியதால் தான் நடிக்க வைத்தோம் என்றும் சில்க் ஸ்மிதாவை பாலு மகேந்திரா தான் தேர்வு செய்தார் என்றும் படத்தினை தயாரித்த டி ஜி தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.

Views: - 487

1

0