கல்லூரி காதலனுடன் ஓட்டம்பிடித்த பிரபல இயக்குனர் மனைவி – சந்தி சிரித்த குடும்ப பிரச்சனை!

Author: Rajesh
13 February 2024, 9:15 pm
Quick Share

தமிழ் சினிமாவின் விசித்திர இயக்குனர் பாலா சேது படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்தார். தொடர்ந்து நந்தா, பிதா மகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை , நாச்சியார் உள்ளிட்ட தரமான படங்களை இயக்கி தேசி விருதுகளை வாங்கியுள்ளார்.

பொதுவாக படம் என்றால் ஹீரோ ஆக்ஷன், ஹீரோயின் அழகு, காதல், ரொமான்டிக் என படமே கலர்ஃபுல்லாக இருக்கும். ஆனால், இவருடைய படத்தைப் பொருத்த வரை அழுகை, அழுக்கு, கருப்பு என்று வித்தியாசமான கோணத்தில் இருக்கும். இதுவே இவரது தனித்துவமான ஸ்டைல்.

அது மட்டும் இல்லாமல் பாடலுக்காக படம் இல்லை. படத்தில் பாடல்கள் ஒன்று , இரண்டு இருந்தால் போதும் என்று ஒட்டு மொத்த சினிமாவின் நிலைமையை மாற்றி வேறு கண்ணோட்டத்தில் கதையை கடைசி வரைக்கும் ஸ்வாரஸ்யமாக கொண்டுச்சென்று பார்க்க வைத்தவர் இயக்குனர் பாலா. சிறந்த இயக்குனர் என பெயர் எடுத்தாலும் தொடர்ந்து தன் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை நல்ல நடிப்பு வரவைக்க கொடுமை படுத்துவதாக பல நடிகர் நடிகைகள் புகார் கொடுத்துள்ளனர்.

இதனிடையே இவரது மனைவி முத்து மலர் அண்மையில் தான் பாலாவை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். முத்து மலர் வேறொரு அரசியல்வாதி மகனுடன் தொடர்பில் இருந்ததாகவும் அதனால் தான் விவாகரத்து செய்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி பாலாவின் மனைவி முது மலர் பாலாவின் கொடுமை தாங்க முடியாமல் அவரின் முன்னாள் காதலரான கல்லூரி காதலனுடன் அடிக்கடி வெளிநாட்டிற்கு சென்று ரகசியமாக சந்தித்து வந்துள்ளார்.

இது ஒரு கட்டத்தில் பாலாவுக்கு தெரியவர குடும்பத்தில் பெரிய பிரச்சனை வெடித்ததாம். அது மட்டுமல்லாமல் திருமணத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்த இயக்குனர் பாலா குடும்பத்தாரின் வற்புறுத்தல் காரணத்தால் தான் பணக்கார வீட்டுப் பெண்ணான முத்து மலரை திருமணம் செய்து கொண்டாராம். எனவே ஒருவருக்கும் ஒருவரை ஒருவர் மனதார பிடிக்காததால் இவர்கள் பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 295

0

0