மலேசியாவுக்கு மூட்டை முடிச்சை கட்டிய விஜய்.. பயம் காட்டிய ரசிகர்கள்..!

Author: Vignesh
15 August 2023, 1:00 pm
vijay
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது.

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. எனவே படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

இந்நிலையில், விஜய்யின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்தலாம் என்று படக்குழுவினர் முடிவு செய்து விட்டார்களாம். அதற்கு என்ன காரணம் என்று விசாரித்ததில் ஒரு பத்திரிகையாளர் அதற்கான விஷயங்களை தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் வட்டாரம் இருக்கிறது. இவர் அரசியலுக்கு கூடிய விரைவில் வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இசை வெளியீட்டு விழா வைத்தால் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா வருங்கால முதல்வர் என்று போஸ்டர் அடிப்பார்கள். அப்படி அடித்தால் ஆளும் கட்சி கடுப்பாகும் பட ரிலீஸ் டைம் இது பிரச்சினையாகும் என்று நினைத்துதான் மலேசியா பக்கம் ஒதுங்கி விட்டனர் என்று கூறியுள்ளார்.

Views: - 525

0

0