Audio Launch’யை தொடர்ந்து Trailer’க்கும் தடை… அடுத்தடுத்த பிரச்சனையில் லியோ – சிக்கி தவிக்கும் விஜய்!

Author: Shree
4 October 2023, 2:02 pm
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் அடுத்தடுத்த ஹிட் திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோவாக கோலிவுட்டில் உச்சத்தை தொட்டிருக்கிறார். உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்களின் பேவரைட் ஹீரோவான விஜய் நடித்து ஒரு படம் வெளியாகிறது என்றாலே அவரின் ரசிகர்கள் படத்தை திருவிழா போல கொண்டாடி தீர்ப்பார்கள்.

படத்தின் பூஜை முதல் இறுதிநாள் கலெக்ஷ்ன் வரை ஒவ்வொன்றையும் தலைப்பு செய்தியாக்கி விடுவார்கள். விஜய்யின் படத்திற்கு ரசிகர்களே மிகப்பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்திடுவார்கள். குறிப்பாக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, ட்ரைலர் ரிலீஸ் நாட்களில் விஜய்யின் ரசிகர்களின் கொண்டாட்டம் புத்தாண்டு நாட்கள் போலவே இருக்கும்.

ஆனால், இந்த முறை லியோ படத்திற்கு நிறைய சிக்கல் வந்துள்ளது. படத்தின் ஆடியோ லான்ச் சென்னை நேரு ஸ்டேடியம் மைதானத்தில் பிரம்மாண்டமான முறையில் நடத்த அதற்கு செட் போடப்பட்டது. ஆனால், திடீரென ” நிரம்பி வழியும் பாஸ் கோரிக்கைகள் மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம் என படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் அறிவித்து விஜய் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தார்.

இதையடுத்து லியோ படத்தின் ட்ரைலரை அக்டோபர் 5 -ம் தேதி (நாளை) வெளியிடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். மேலும், அதே நாளில் சென்னையின் மிகப்பெரிய திரையரங்குகளில் ஒன்றான ரோகிணி தியேட்டரில் ” ட்ரைலரை பொதுவெளியில் திரையிட்டு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது திடீரென அதற்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது போன்ற நிகழ்வின் மூலம் தான் ரசிகர்களின் உற்சாகமும் அவர்களின் ஆரவாரமும் தான் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்க்கும். ஆனால், அடுத்தடுத்த கொண்டாட்டத்திற்கு இப்படி தடைவிதிக்கப்படுவதால் படத்தின் நாயகன் விஜய் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளார். இன்னும் என்னென்ன பிரச்சனை கொண்டுவரப்போகிறார்களோ?என படக்குழு அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் கூறுகிறது.

Views: - 333

0

0