லோகேஷுக்கு சம்பள பாக்கி உண்மை தானா? அடையாளத்தை கொடுத்த விஜய்யே ஆப்பு வச்சிட்டாரா?

Author: Rajesh
8 December 2023, 3:57 pm
vijay
Quick Share

கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. லியோ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார்.

லியோ படம் எதிர்பார்த்த வசூல் கிடைக்காததால் அப்படத்தின் இயக்குனர் லோகேஷுக்கு சம்பளம் பாக்கி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து பேசிய பிரபலம் ஒருவர் சம்பள பாக்கி வைத்தது உண்மை தான். ஆனால் அதை லோகேஷ் பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லை.

காரணம் அவர் எதிர்பார்த்த பிரபலத்தை அடைந்துவிட்டார். அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்ததே விஜய் தான். இதற்கு முன்னர் வெளியான கைதி, மாநகரம் பெரிய அளவில் பேசப்பட்டாலும் அவர் பிரபலமானது கமலின் விக்ரம் , விஜய்யின் மாஸ்டர், லியோ திரைப்படம் தான். எனவே இந்த விவகாரத்தை விஜய்யிடம் கூட லோகேஷ் எடுத்து செல்லவில்லையாம். விஜய்க்கு தெரிந்தும் அவரும் கண்டுகொள்ளவில்லை. காரணம் அது ஒன்றும் பெரிய பணம் இல்லை லோகேஷ் தற்போது சூப்பர் ஸ்டாரை இயக்கும் அளவிற்கு புகழ் பெற்றுவிட்டதால் அவர் கண்டுக்கொள்ளவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

Views: - 182

0

0