17 நாள் நம்ப வச்சி ஏமாத்திட்டாரு… மாரிசெல்வராஜ் மீது பிரபல நடிகை பரபரப்பு குற்றசாட்டு!

Author: Shree
25 July 2023, 4:47 pm
mari selvaraj raveena
Quick Share

தமிழ் சினிமாவின் மிகவும் திறமை வாய்ந்த கலை நுணுக்கம் அதிகம் தெரிந்து முறையாக திரைப்படம் எடுக்கும் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவர் பல்வேறு புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். பிரபல இயக்குனரான ராமிடன் உதவி இயக்குனராக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருக்கிறார்.

அவரிடம் திரை நுணுக்கங்களை கற்றுத்தெறிந்து திரைத்துறையில் இயக்குனராக அவதாரம் எடுத்தார். பிரபல வார இதழ் பத்திரிகையான “மறக்க நினைக்கிறேன்” என்ற தொடரை எழுதியுள்ளார். தமிழில் பெரியேறும் பெருமாள் படத்தை இயக்கி மாபெரும் வெற்றிப்படைத்தார். திருநெல்வேலிக்குப் அருகில் இருக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயத்தை தொழிலாக கொண்ட பெற்றோருக்கு பிறந்த மாரி செல்வராஜ் கிராமங்கள் சார்ந்த படங்களை இயக்குவதிலேயே ஆர்வமிக்கவராக இருக்கிறார்.

mari selvaraj - updatenews360

இவர் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு தற்போது மாமன்னன் படத்தை இயக்கி அண்மையில் அப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று நல்ல வசூலும் ஈட்டியது. இப்படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக ரவீனா ரவி நடித்திருப்பார். அவரது ரோல் பேசும்படியாக அமைந்தது. குறிப்பாக பஹத் பாசிலுக்கு பொருத்தமான மனைவியாக ரவீனா படத்தில் தோன்றியிருந்தார்.

இந்நிலையில் மாமன்னன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்ட ரவீனா ரவி, ” நான் மாமன்னன் படத்திற்காக மொத்தம் 17 நாட்கள் ஷூட்டிங் சென்றேன். ஆனால், பேசிய டயலாக் காட்சிகள் அத்தனையும் இயக்குனர் வெட்டி தூக்கிவிட்டார். எனவே என்னுடைய கேரக்டருக்கு டயலாக் எதுவும் இல்லை, பேர் கூட இல்லை படம் வெளியானதும் இயக்குனர் மீது ஒரு கோபம், மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால், பின்னர் என்னுடைய ரோல் பெரிய அளவில் ரீச் ஆனதால் அந்த வருத்தமெல்லாம் போய்விட்டது என ரவீனா கூறியுள்ளார்.

Views: - 241

0

0