Vijay TV நீயா நானா பிரபலம் இரயில் மோதி பலி.. அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்..!

Author: Vignesh
8 April 2024, 12:57 pm
neeya naana
Quick Share

விஜய் டிவியில் கடந்த 18 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி நீயா நானா இந்த நிகழ்ச்சியை முதல் எபிசோடில் இருந்து தொகுத்து வழங்கி வருபவர் கோபிநாத். இந்த நிகழ்ச்சியில், தோசை கொண்டாடப்பட வேண்டிய உணவு என ஒரு தரப்பினரும் தோசை ஒரு சாதாரண உணவு என்று கூறுபவர்கள் மறுபிறமும் விவாதம் செய்தனர்.

மேலும் படிக்க: கிளாமர் லுக்கிற்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. அடேங்கப்பா பிழைக்க தெரிஞ்ச பொண்ணு..!

neeya naana

அதில், பிரணிதா என்ற பெண் தன்னுடைய அண்ணனுக்கு தோசை பிடிக்கும் என்பதால் எங்கள் வீட்டில் தினமும் தோசை மட்டும் தான் இருக்கும் என்று சொல்லி இருந்தார். அதை தொடர்ந்து, பிரணிதாவின் அம்மாவும் தன்னுடைய மகன் 20 தோசைக்கு மேலே சாப்பிடுவார் என்று சொல்லி பெரிய அளவில் பிரபலம் ஆகினார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், கடந்த புதன்கிழமை சென்னையில் நடந்த ரயில் விபத்தில் பிரணிதாவின் அண்ணன் பிரணவ் பலியாகி உள்ளார் என்ற தகவல் இணையதளத்தில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மேலும் படிக்க: செத்துப்போனா என்னோட பழைய போட்டோஸ் போடாதீங்க ப்ளீஸ்.. மனம் உடைந்து கதறி அழுத மும்தாஜ்..!(Video)

neeya naana

இதனை கேள்விப்பட்ட இணையவாசிகள் பலரும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த அம்மா தன்னுடைய மகன் மீது எவ்வளவு பாசமாக அவருக்காக பார்த்து பார்த்து விதவிதமாக தோசை சுட்டுக் கொடுப்பேன் என்று சொல்லி இருந்தார். ஆனால், யார் கண்ணு பட்டு விட்டதோ தெரியவில்லை ஒரு மாதத்திற்குள் இப்படி ஒரு மரணம் ஏற்பட்டு விட்டது என்று பலரும் தங்களுடைய இரங்கள்களை தெரிவித்து வருகின்றன.

Views: - 103

0

0