அண்ணன் தம்பிக்குள் சண்டை… பிரபு தேவா குடும்பத்திற்குள் பிரச்சனை!

Author: Rajesh
27 January 2024, 8:41 am
prabhu deav
Quick Share

இந்திய சினிமாவில் முன்னணி நடன இயக்குனரான பிரபு தேவா நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் என ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர். நடன சூறாவளியான இவர் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று பாராட்டப்படுபவர். வெற்றிவிழா திரைப்படத்தில் தான் முதன் முதலாக நடனமாடினார். அதையடுத்து பல்வேறு திரைப்படங்களில் நடனமாடியுள்ளார்.

prabhu deva - updatenews360

இன்றுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடியுள்ளார். மின்சார கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவா சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளார்.

தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். காதலன், லவ் பேர்ட்ஸ், மின்சார கனவு, நாம் இருவர் நமக்கு இருவர், வானத்தைப் போல உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் 1995ம் ஆண்டு ரம்லத் எனபவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் அவர் குண்டாக இருப்பதாக அவரை விவாகரத்து செய்துவிட்டார். அவருக்கு மொத்தம் மூன்று மகன்கள். அதில் மூத்த மகன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர்.

prabhu deva - updatenews360

இதையடுத்து நடிகை நயன்தாரவை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்தார். பின்னர் ரமலத் கொடுத்த டார்ச்சரால் நயன்தாரவை விட்டு பிரிந்துவிட்டார். அதன் பின்னர் யாருக்கும் தெரியாமல் டாக்டர். ஹிமானி சிங் என்ற பெண்ணை 2020ம் ஆண்டில் ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். இவரது இரண்டாவது மனைவி பெரிதாக மீடியாவிற்கு முகம் காட்டாமல் இருந்து வந்தார். அண்மையில் தான் பிரபு தேவா- ஹிமானி சிங் தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்து. இது என் வம்சத்தில் பிறந்த முதல் குழந்தை என பிரபு தேவா மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

இதையடுத்து பிரபு தேவா ஷூட்டிங்கை தாண்டி குடும்பம் , குழந்தைகள் , குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வது என மிகுந்த மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். இந்நிலையில் பிரபு தேவா குடும்பத்திற்கு அண்ணன் தம்பிகளுக்குள் பெரும் பிரச்சனை உள்ளதாக பிரபு தேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத் பேட்டி ஒன்றில் பல விஷயங்களை வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதாவது, வீட்டில் என் அண்ணனுக்கு தான் வீட்டில் அதிகமான மதிப்பு இருக்கிறது.

பொதுவாக யாரிடம் பணம் அதிமாக இருக்கிறதோ அவர்களை தான் சமுதாயம் மதிக்கும். அந்த மாதிரி தான் பிரபு தேவா சொல்வது தான் வீட்டில் நடக்கும். அவர் சொல்வதை தான் அம்மா கேட்பார்கள் . ஏன் என்றால் அவர் தான் அதிகமாக சம்பாதிக்கிறார். வீட்டில் எங்களுக்கு மரியாதையே இருக்காது. நாங்கள் வீட்டில் ஒரு நபராக இருப்போம் அவ்வளவு தான் என்று நாகேந்திர பிரசாத் கூறியுள்ளார். இதை வைத்து பார்த்தால் பிரபு தேவா, நாகேந்திர பிரசாத் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு சண்டை முற்றியிருக்குமோ என பல கோணங்களில் ரசிகர்கள் சிந்தித்து வருகின்றனர்.

Views: - 260

0

0