அரசியல் அதிகமாக இருக்கு.. இனி இந்தியாவுக்கு வரமாட்டேன்: விஜய் பட நடிகை பகீர்!!

Author: Vignesh
28 March 2023, 8:00 pm
Quick Share

தமிழில் தளபதி விஜய் நடித்த தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா. பின்னர் நிக் ஜோன்ஸ் என்ற பிரபல அமெரிக்க இசை கலைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்டிவாக இருப்பவர்,  இவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை ’அன்ஃபினிஷ்டு’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

priyanka chopra - updatenews360

சமீபத்தில் பிரியங்கா – நிக் ஜோடி வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்டனர். இந்நிலையில், ஹிந்தி சினிமாவில் பல முன்னணி ஹீரோக்கள் உடன் நடித்த பிரியங்கா சோப்ரா ஒரு கட்டத்தில் ஹாலிவுட்டிலும் களமிறங்கி தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

இதனிடையே, Armchair Expert Podcastல் பேசிய பிரியங்கா சோப்ரா தான் இந்தியாவைவிட்டு வெளியேறி அமெரிக்காவில் செட்டில் ஆக என்ன காரணம் என தற்போது தெரிவித்து இருக்கிறார்.

அதில் அவர் கூறியதாவது, “பாலிவுட்டில் அதிகம் Politics இருக்கிறது என்றும், தன்னை தொடர்ந்து கார்னர் செய்ததாகவும், யாரும் தன்னை படத்தில் cast செய்யவில்லை என்றும், பலருடன் பிரச்சனைகள் ஏற்பட்டதால், இந்த கேம் தனக்கு பிடிக்கவில்லை எனவும், இந்த politics தனக்கு சோர்வை ஏற்படுத்தியதாகவும், அதனால் தான் பிரேக் எடுக்க விரும்பியதாகவும், அந்த நேரத்தில் ஹாலிவுட்டில் இருந்து மியூசிக் வாய்ப்பு வந்த நிலையில், அதை உடனே ஏற்றுக்கொண்டு இந்தியாவை விட்டே வந்துவிட்டேன் எனவும், தான் பாலிவுட்டை விட்டு வெளியேற வாய்ப்புகளை தேடிக்கொண்டிருந்த நேரத்தில் தான் சரியாக அந்த வாய்ப்பு வந்தது” என பிரியங்கா தெரிவித்து இருக்கிறார்.

priyanka chopra - updatenews360

இந்நிலையில், பிரியங்காவின் பேட்டி தற்போது பாலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 242

0

0