அப்பா 5 பேர வச்சிருந்தாரு.. MR.ராதாவால் தனது தாய் பட்ட கஷ்டத்தை உடைத்த ராதா ரவி..!

Author: Vignesh
29 June 2023, 10:45 am
m r radha-updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் அந்த காலகட்டத்தில் மூத்த நடிகராகவும், பழம்பெறும் நடிகராகவும் எம் ஆர் ராதா கொடி கட்டி பறந்து வந்தார். இந்நிலையில், அவரது மகனான நடிகர் ராதாரவி தற்போது தமிழ் சினிமா துறையிலும் அரசியலிலும் முக்கிய பொறுப்பில் இருந்தும், சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.

m r radha-updatenews360

சமீபத்தில் தன்னுடைய அப்பாவுக்கும் எம்ஜிஆருக்கும் ஏற்பட்ட பிரச்சினை குறித்து மனம் திறந்து பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார் எம் ஆர் ராதா ரவி. அப்போது தன்னுடைய அம்மா பற்றியும் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

தனது தந்தை ஜெயிலில் இருந்தபோது தாய் பட்ட கஷ்டமும் தன்னை வளர்த்தது குறித்தும் எம்.ஆர்.ராதா மனம் உருகி பேசியுள்ளார். தான் அப்போது 12 ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாகவும், தன் அம்மா இல்லை என்றால் தங்கள் அட்ரஸே இருக்காது என்றும், ஒரு இடத்தில் கூட எம் ஆர் ராதாவின் மனைவி என்று தனது தாய் கூற மாட்டார்.

m r radha-updatenews360

அந்த சமயத்தில் வீட்டில் இருந்த 18 காரையும், வித்ததாகவும் ஒரு முறை அப்பாவை பார்க்க ஜெயிலுக்கு தனது தாய் நடந்தே சென்றதாகவும், தனது தாய்க்கு அந்த சமயத்தில் ஒருவர் கூட உதவி செய்யவில்லை என்றும், தங்கள் அப்பா வைத்திருந்த 4,5 பேருக்கு வசதி எல்லாம் செய்து வைத்ததாகவும், அதில் ஒன்றுதான் ராதிகாவும் எனவும், எல்லாரையும் தாங்கள் ஒரே குடும்பமாக பார்த்ததாகவும், ஆனால் ஒருவர் கூட அந்த நேரத்தில் உதவவில்லை என ராதாரவி மனம் திறந்து பேசியுள்ளார்.

Views: - 467

0

1