“எனக்கு வாழ்க்கை கொடுத்த சினிமாவுக்கு நிர்வாணமாக கூட நடிப்பேன்” – நடிகை ராதிகா ஆப்தே பளீச்!

Author: Rajesh
30 January 2024, 7:40 pm
Quick Share

வேலூரை சொந்த ஊராக கொண்ட தமிழ் நடிகையான ராதிகா ஆப்தே பாலிவுட் நடிகைகளில் கவர்ச்சி காட்ட கொஞ்சமும் தயங்காதவர். இவர், தமிழில் தோனி, கபாலி, அழகு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கபாலி படத்தில் ரஜினியுடன் ஜோடி போட்டதன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு பிரபலம் ஆனார்.

குறிப்பாக மாய நதி இன்று மார்பில் வழியுதே பாடல் மிகப்பெரிய அளவில் அவரை பிரபலம் ஆக்கியது. சமீபத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் இருவரும் சேர்ந்து நடித்த மெரி கிறிஸ்துமஸ் படத்தில் ராதிகா ஆப்தே கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஆனால், இந்த படம் பெரிய அளவில் வரவேற்கப்படவில்லை.

கவர்ச்சி காட்சிகளில் மிகவும் தாராளமாக நடிக்கும் ராதிகா ஆப்தே ஹாலிவுட் படங்களில் நிர்வாணமான காட்சிகளில் தயங்காமல் நடித்துள்ளார். அது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கேட்டதற்கு, நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் எங்கள் குடும்பம் ஒருவேளை சாப்பாட்டுக்காக கஷ்டப்பட்டு இருக்கிறது.

அந்த சமயங்களில் ஒரு மாதம், பல மாதங்கள் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் மோசமான வார்த்தைகளால் வீட்டின் உரிமையாளரிடம் திட்டு வாங்கி இருக்கிறோம். மிகவும் கொடுமை என்னவென்றால் அடுப்பு இல்லாத காரணத்தினால் மெழுகுவர்த்தியை வாங்கி வந்து அதன் சூட்டில் சமைத்து சாப்பிட்டு இருக்கிறோம்.

அதுபோன்ற சமயங்களில் எங்களுக்கு யாரும் உதவவில்லை. ஏழ்மையில் கண்டுகொள்ளாத எல்லோரும் சினிமாவில் வளர்ந்த பிறகு கௌரவத்திற்காக எங்களிடம் பேச துவங்கினார்கள். எனவே எனக்கு வாழ்க்கை கொடுத்த சினிமாவிற்காக நான் ஆடையின்றி நடிக்க நான் தயக்கம் காட்டுவதில்லை.

ஆனால், அதை பற்றி என்னை கேள்வி கேட்க பலரும் வரிசையில் வருகிறார்கள். அது போன்ற ஆட்களுக்கு நான் பதில் சொல்லவேண்டும் என அவசியமே இல்லை. எனக்கு வாழ்க்கை கொடுத்த சினிமாவுக்கு என்ன தேவையோ அதனை நான் கொடுப்பது என்னுடைய கடமை என மிகவும் தைரியமாக தனது கருத்தை பதிவு செய்தார்.

Views: - 289

0

0