அந்த படத்தில் முட்டி போட்டு நடித்த ரகுவரன்..! பல வருடங்களுக்கு பிறகு சீக்ரெட்டை உடைத்த பிரபல நடிகை..!

Author: Vignesh
1 March 2023, 12:30 pm
Quick Share

தமிழ் சினிமா உலகில் மிக பிரபமாலான வில்லனாக இருந்தவர் ரகுவரன். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் முதன்முதலில் 1982 ஆம் ஆண்டு வெளியான அக்கா என்ற மலையாள படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

அதன் பின்னர் இவர் தமிழில் ஏழாவது மனிதன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

raghuvaran - updatenews360

மேலும், இவர் ஆரம்பத்தில் ஹீரோ மற்றும் துணை கதாபாத்திரத்தில் தான் நடித்து இருந்தார். அதன் பின்னர் இவர் வில்லனாக நடிக்க துவங்கினார். வில்லன் என்றாலே கட்டுமஸ்தான உடலும், கம்பீரமான குரலும் இருக்கவேண்டும் என்ற எல்லோருடைய எண்ணத்தை மாற்றி ஒல்லியான உடல் அமைப்பில் மெல்லிய குரலோடு வில்லத்தனத்தை சினிமாவிற்கு ரகுவரன் கொண்டு வந்தார்.

ஆனால், ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் தான் இவருக்கு நன்றாக பொருந்தியது. அதனால் தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
90ஸ் ரசிகர்களுக்கு நடிகர் ரகுவரன் ஒரு மிரட்டலான வில்லனாக இருந்தார்.

மேலும், இவர் தமிழில் உள்ள ரஜினி, கமல், விஜயகாந்த் சரத்குமார், கார்த்தி என்று பல நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதனிடையே ரகுவரன் கடந்த 1996ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார்.

raghuvaran - updatenews360

நடிகை ரோகிணியும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக தான் திகழ்ந்து வந்தவர். திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷிவரன் என்ற குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

raghuvaran - updatenews360

பிரிவிற்கு பின் நடிகர் ரகுவரன் கவனிக்க ஆளில்லாமல் தனியாகத்தான் வசித்து வந்தார். பின்னர் 2008 ஆம் ஆண்டு சர்க்கரை நோய் காரணமாக நடிகர் ரகுவரன் உயிர் பிரிந்தார். இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் பலர் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.

இதனிடையே, தற்போது ரகுவரன் குறித்து ஒரு சுவாரசியமான விஷயம் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது 1990ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அஞ்சலி. இப்படத்தில் ரகுவரன், ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். பல குழந்தை நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட அஞ்சலி படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதற்கு ரகுவரனுக்கு முக்கிய பங்கு உண்டு என்று சொல்லலாம்.

anjali film - updatenews360

அஞ்சலி படத்தில் ரகுவரன் மனவளர்ச்சி குன்றிய குழந்தைக்கு அப்பாவாக நடித்து இருப்பார். மனவளர்ச்சி குறைபாடுள்ள குழந்தையை வளர்ப்பதில் பெற்றோர்கள் படும் மன வலியையும், சவால்களையும் ரகுவரன் தன் எதார்த்தமான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருப்பார்.

anjali film - updatenews360

இதனிடையே, பல வருடங்களுக்குப் பிறகு நடிகை ரேவதி அஞ்சலி படத்தை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்து உள்ளார். ரகுவரன் தோற்றத்தில் மிகவும் உயரமானவர் என்பதால், ரகுவரன், ரேவதி மற்றும் குழந்தைகள் ஒரே பிரேமில் நடிக்க வேண்டும் என்பதால் ரகுவரன் அந்த சீனில் முட்டிபோட்டு நடித்ததாக ரேவதி தெரிவித்துள்ளார்.

anjali film - updatenews360

நடிகர் ரகுவரன் சினிமாவில் தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் பல ரசிகர்களைப் பெற்று உள்ளார். இன்னும் சிறிது காலம் நடிகர் ரகுவரன் இருந்தால் டேனியல் மிரான்டா, மார்க் அண்டனி, அரங்கநாதன் போன்ற வலுவான கதாப்பாத்திரங்களை நம்மிடம் விட்டுச் சென்று இருப்பார்.

Views: - 777

7

0