ரஜினியை யாரும் இந்த அளவுக்கு கேவலப்படுத்தியது இல்லை.. சூப்பர் ஸ்டாரை காயப்படுத்திய மனோரமா..!

Author: Vignesh
31 July 2023, 4:00 pm
rajinikanth manorama-updatenews360
Quick Share

1500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சாதனை படைத்தவர் ஆச்சி என்கிற மனோரமா. இவர் நடிகையை தாண்டி நல்ல மனம் கொண்டு புகழ்பெற்றவர். இருந்தபோதிலும், மனோரமா வாழ்க்கையில் சில சறுக்கல்கள் ஏற்பட காரணம் ஒரு அரசியல் மேடை தான்.

nagesh kamal - updatenews360

ரஜினிகாந்துடன் பல படங்களில் இணைந்து நடித்த மனோரமா ரஜினிகாந்தை பார்த்து இதுவரை யாரும் பேச முடியாத அளவிற்கு படுமோசமான வார்த்தைகளை பேசி விமர்சித்திருக்கிறார். அந்த சம்பவத்திற்கு பின் ஆறு மாதங்கள் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் இருந்துள்ளார். அப்போதுதான் மனோரமாவிற்கு அருணாச்சலம் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார் ரஜினிகாந்த்.

rajini - updatenews360

ஆனால், படப்பிடிப்பு முடியும் வரை குற்ற உணர்ச்சியில் இருந்த மனோரமா ரஜினியை நேருக்கு நேர் பார்க்காமல் இருந்து தவிர்த்ததாக சித்ரா லட்சுமணன் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், ரஜினிகாந்த் இது பற்றி மனோரமாவை பதிலுக்கு பதில் எங்கும் விமர்சித்து பேசியதில்லை என்றும், அப்படி மனோரமாவின் கலை உலக பொன்விழாவிற்கு ரஜினிகாந்த்தை நேரில் சென்று சந்திக்காமல் போனில் சொன்னதை பொருட்படுத்தாமல் நிகழ்ச்சிக்கு சென்றவர் ரஜினிகாந்த் என்றும், அப்போது பேசுகையில், ரஜினிகாந்த் மேடையில் பில்லா பட சம்பவம் ஒன்றை பேசி இருந்தார்.

rajinikanth manorama-updatenews360

அதாவது, 1980 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, பாலாஜி, மனோரமா ஆகியோரின் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்த திரைப்படம் “பில்லா”.இத்திரைப்படம் ஹிந்தியில், அமிதாப் பச்சான் நடித்த “டான்” திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும். ரஜினி நடித்த “பில்லா” திரைப்படத்தை ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருந்தார்.

சுரேஷ் பாலாஜி இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு மனோரமாவை பாராட்டும் விதமாக எடுக்கப்பட்ட விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், “பில்லா” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டார்.

rajinikanth manorama-updatenews360

பில்லா” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தபோது அங்கே படப்பிடிப்பை பார்த்துக்கொண்டிருந்த ஒரு நபர், ரஜினியை குறிப்பிட்டு “பரவாயில்லையே, பைத்தியம் நல்லா டான்ஸ் ஆடுதே” என கேலி செய்திருக்கிறார்

ரஜினிகாந்த் அந்த காலகட்டத்தில் உடல்நிலை சரியில்லாமல் சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கூட்டத்தில் இருந்து இவ்வாறு ஒரு நபர் கூறியவுடன், அங்கிருந்த மனோரமா, அந்த நபரை அழைத்து அவரது சட்டையை பிடித்து அடித்தாராம். “யாரடா பைத்தியம்ன்னு சொன்ன, அந்த தம்பி எவ்வளவு கஷ்டப்பட்டு ஆடிட்டு இருக்காரு” என கண்டபடி திட்டினாராம்.

மேலும் அந்த நபரை “இந்த இடத்தை விட்டு வெளியில் அனுப்பினால்தான் இங்கே ஷுட்டிங் நடக்கும்” என கூறினாராம் மனோரமா. அந்த நபரை படக்குழுவினர் வெளியே துரத்தி அனுப்பிவிட்டனர். அந்த நபர் போன பிறகுதான் நடிக்கவே தொடங்கினாராம் மனோரமா.

rajinikanth manorama

இந்த சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட ரஜினிகாந்த், “ஒருவாட்டி அரவணைச்ச கை, நீங்க ஆயிரம்வாட்டி அடிச்சா கூட ஏத்துப்பேன்” என மிகவும் உணர்ச்சிப்பொங்க பேசினார். மேடையில் அமர்ந்துகொண்டிருந்த மனோரமா ரஜினியின் பேச்சை கேட்டு பூரித்துப்போனார்.

Views: - 206

0

0