தமன்னாவுக்காக ரம்பாவை கண்டுகொள்ளாத கணவர்.. குடும்பத்திற்குள் நடந்த குழப்பத்தால் குமுறிய தொடையழகி..!

Author: Vignesh
27 December 2023, 3:30 pm
Rambha
Quick Share

‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ரம்பா. இதன்பின் ‘செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார்.

நடிகை ரம்பாவிற்கு கடந்த 2010ஆம் ஆண்டு இந்திர குமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இதனிடையே அடிக்கடி தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். நடிகை ரம்பா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய நிலையில் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறாராம்.

மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ள ரம்பா சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், நான் இன்னும் இன்ஸ்டாகிராமில் என்னுடைய கணவரை பாலோ செய்யவில்லை காரணம் அவரிடம் என்னை முதலில் ஃபாலோ பண்ணுங்க என்று சொன்னேன். ஆனால், அவர் என்னை பாலோ பண்ணாமல் தமன்னாவை பாலோ செய்தார். அதனால், தான் இன்னும் அவரை பாலோவ் செய்யவில்லை என்று ரம்பா தெரிவித்துள்ளார். தற்போது ரம்பா பேசிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 177

0

0