குழந்தை திருமணம் செய்துக்கொண்ட ரேகா நாயர்…. 18 வயசிலே எல்லாம் முடிஞ்சிபோச்சு – இவங்களுக்கு இவ்வளவு கஷ்டமா?

Author: Shree
9 August 2023, 10:06 am
rekha nair
Quick Share

பிரபல சர்ச்சையிக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பரவலாக முகமறியப்பட்டார். விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த இவர் தொடர்ந்து சன், கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.

rekha nair-updatenews360

இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி. சித்ராவின் தற்கொலை ரகசியங்களை குறித்து கூட பல யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார். அதன் பின்னர் இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் ஆபாச காட்சிகளில் அரைநிர்வாணமாக நடித்து சர்ச்சை ஏற்படுத்தினார். இதனால் அவரை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் மோசமாக விமர்சிக்க அவரை ரேகா நாயர் அடித்து துவைத்ததெல்லாம் செய்தியாக வெளியானது.

rekha nair

இதனிடையே எப்போதும் பேட்டிகளில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் ரேகா நாயர் தனது சோகக்கதையை கூறி அனுதாபத்தை தேடியுள்ளார். ஆம், ரேகா நாயர் தன்னுடைய 17 வயதிலே முதல் திருமணம் செய்துக்கொண்டாராம். 18 வயதில் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தை பிறப்பதற்கு முன்னரே கணவர் கருத்து வேறுபாட்டினால் அவரை பிரிந்து சென்றுவிட்டாராம். அதன் பின்னர் ஒற்றை பெண்மணியாக தனது மகளை வளர்த்து வந்த அவர் தனது 35 வது வயசில் இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டாராம். சர்ச்சையான நடிகையாக பார்க்கப்படும் ரேகா நாயர் இத்தனை கஷ்டங்களை அனுப்பிவைத்தாரா? என எல்லோரும் வியந்துவிட்டனர்.

Views: - 442

0

0