தயாரிப்பாளர்கள் கொடுக்கும் அந்த மாதிரியான டார்ச்சர் .. கசப்பான விஷயத்தை பகிர்ந்த ரித்திகா சிங்..!

Author: Vignesh
16 October 2023, 2:17 pm
rithika singh
Quick Share

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங்.  அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங்.

rithika singh - updatenews360

தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள்.

அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது. அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று.

ritika singh - updatenews360

இந்நிலையில், தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் ரித்திகா இணையத்தில் ஆக்டிவாக இருந்து ஒர்க்கவுட் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில், அரைகுறை ஆடையணிந்து ரித்திகா சிங்வின் முகம் சுளிக்க வைக்கும் படியான ஒரு ஒர்க்கவுட் புகைப்படம் வெளியாகி வைரலானது.

ritika singh - updatenews360

இதனிடையே, மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வருபவர் மம்முட்டி. இவரது மகன் துல்கர் சல்மான் மலையாளம் படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். King of Kotha என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஐட்டம் பாடலான கலாட்டாக்காரன் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலில் நடிகை ரித்திகா சிங் கவர்ச்சி ஆட்டம் போட்டிருக்கிறார்.

மேலும், சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த கொலை நடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர். இதனிடையே, பெண்களுக்கு நடக்கும் பாலியல் பிரச்சனை பற்றி ரித்திகா சிங் பேசி இருக்கிறார். அதில், இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் இளைஞர்கள் பெரும்பாலானோர் தயாரிப்பாளர்கள் தான் இருக்கிறார்கள். இந்த பிரச்சனைகளை தடுக்க பெண்கள் அவசியம் தற்காப்புகலையை கற்றுக் கொள்ள வேண்டும். பாலியல் தொந்தரவு செய்தால் அவரை திருப்பித் தாக்க வேண்டும் என்று ரித்திகா சிங் கூறியதாக ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Views: - 180

0

0