அந்த போட்டோவை இப்பவும் நான் பாத்துக்கிட்டே இருப்பேன்.. வெளிப்படையாக பேசிய சைந்தவி..!

Author: Vignesh
25 May 2024, 4:35 pm
gv prakash
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர், நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து, அதில் தனது முழு திறமையை காட்டி நல்ல இசையை தொடர்ந்து கொடுத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயில், செல்பி, ஐயங்காரன் ஆகிய படங்களில் ஜிவி.பிரகாஷின் நடிப்பு நன்றாக இருந்தாலும், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனிடையே, ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்ட ஜென்டில்மேன் படத்தில் இடம்பெற்ற சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாடலை முதன்முதலாக பாடினார் அசத்தியது குறிப்பிடத்தக்கது.

g v prakash -updatenews360

மேலும் படிக்க: யாரையும் நம்பிறாதீங்க.. மருத்துவமனையில் இருந்து திடீர் வீடியோ வெளியிட்ட மதுரை முத்து மனைவி..!

மேலும், கடந்த 2006ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக கலக்கிய ஜி.வி.பிரகாஷ் விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்தார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் ஆதிக்கம் செலுத்தி வருடிகிறார். இவருக்கு படிப்படியாக நடிப்பின் மீது ஆர்வம் வந்த நிலையில், படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார், இன்னொரு பக்கம் இசையமைத்தும் வரும் இவர், கடந்த 2013ம் ஆண்டு பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மேலும் படிக்க: தம்பி ஓடாத நில்லு.. மகன்களுடன் கொஞ்சி விளையாடிய நயன்..!(Video)

இந்நிலையில், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் திருமணம் செய்துகொண்டு 11 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர். அவர்கள் பிரிவதாக நேற்றில் இருந்தே செய்தி பரவி வந்தது. தற்போது, அதிகாரபூர்வமாக ஜி.வி.பிரகாஷ் சைந்தவி இருவரும் விவாகரத்தை அறிவித்து இருக்கிறார்கள்.

மேலும் படிக்க: நமக்கு எதுக்கு வம்புனு ஒதுங்கிய உச்ச நடிகர்கள் – மோடியின் Biopic’ல் ஹீரோவாக நடிக்கும் தமிழ் நடிகர்..!

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய சைந்தவி கொடுத்த பழைய பேட்டி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில், அவரிடம் கல்யாணத்தில் மறக்க முடியாத நிகழ்வு பற்றி கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த, சைந்தவி கல்யாணமே மறக்க முடியாத நிகழ்வுதான். அந்த நாளை மறக்க முடியாது. திருமணம் செய்து கொண்டு, இப்பவும் கல்யாண போட்டோவை பார்த்துக் கொண்டிருப்பேன். அதுக்கு, ஜி.வி ஏன் எப்ப பாத்தாலும் அதையே பாத்துகிட்டு இருக்க எவ்வளவு வாட்டி பாப்பாய் என்று கேட்பார். நான் அந்த மொமெண்ட்டை இப்பவும் நினைத்து பார்க்கிறேன் என்று சொல்வேன். எனக்கு அது ரொம்ப பிடிக்கும் என்று சைந்தவி தெரிவித்துள்ளார்.

Views: - 103

0

0