காதலிக்க ஆரம்பிச்சுட்டேன்… அதான் போஸ்ட் போடல.. Sorry சொன்ன கண்மணி சீரியல் நடிகை…!!

Author: Babu Lakshmanan
18 May 2022, 4:44 pm
Quick Share

நடிகை லீஷா ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். கல்லூரி படிப்பு எல்லாம் சென்னையில் தான் முடித்துள்ளார். சீரியல்கள் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் தான் ஈடுபட்டிருந்தார். அதன்பிறகு சசிகுமார் அவர்களுடன் பலே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார்.

இதில் துணை நடிகையாக நடித்து இருப்பார். அதை தொடர்ந்து மேலும் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடயர் லிசா, பிரியமுடன் பிரியா என்ற பல திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

2 வருடங்களாக கண்மணி என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இவரது கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.இதனைக் காணவே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

தற்போது, கவர்ச்சி உடையில் காதலிக்க ஆரம்பித்து விட்டதாகவும், பிரேக் அப் ஆன பிறகு போஸ்ட் போடுகிறேன் எனக் கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இளசுகள் அதிர்ந்து போயிள்ளனர்.

Views: - 899

2

0