தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணமாக இருந்த மச்சினிச்சி… குடும்பத்தில் வெடித்த பெரும் சர்ச்சை!

Author: Rajesh
26 December 2023, 2:44 pm
aishwarya dhanush
Quick Share

கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.

தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.

பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், இருவரும் இன்றுவரை சட்டபூர்வமாக விவாகரத்து செய்ய அணுகவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தனுஷ்சை பிரிந்த பின் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா தன் அப்பா ரஜினிகாந்த்தை வைத்து சிறப்பு தோற்றத்தில் நடித்துவரும் லால்சலாம் படத்தினை இயக்கி வரும் நிலையில், ஐஸ்வர்யா தனுசை பிரிந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிய நிலையில், அவரவர் தங்களது கெரியரில் கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்ப்போது ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதாவது, தனுஷ் ஐஸ்வர்யாவை பிரிய மிகப்பெரிய காரணமாக இருந்ததே மச்சினிச்சி சௌந்தர்யா ரஜினிகாந்த் தானாம். ஆம், சௌந்தர்யா தனுஷ் உடன் இணைந்து பணியாற்றியபோது அவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

இதனை அறிந்து வீட்டில் பெரிய பிரச்சனையே வெடித்ததாம். இதனால் இனிமேல் என் தங்கையுடன் சேர்ந்து நீங்கள் பணியாற்றவேண்டாம் என ஐஸ்வர்யா தனுஷிடம் கூறி சண்டையிட்டாராம். இதுதான் இவர்கள் ஆரம்ப பிரச்சனையாக இருந்ததாம்.

Views: - 217

0

0