மீண்டும் பப்லு உடன் இணைந்த ஷீத்தல்… அப்போ அதெல்லாம் பொய்யா?

Author: Rajesh
8 January 2024, 9:58 am
babloo sheetal
Quick Share

பிரபல தொலைக்காட்சி நடிகரான பப்லு பிரித்திவிராஜ் தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1990கள் மற்றும் 2000களில் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து பேமஸ் ஆன இவர் 90ஸ் கிட்ஸ்களுக்கு பரீட்சியமான நடிகராக இருந்து வந்தார்.

babloo sheetal

இவர் நடன நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்று பிரபலமானார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அந்நிகழ்ச்சியின் நடுவரான சிலம்பராசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் 2014 ஆண்டில் ஒளிபரப்பாகத் தொடங்கிய வாணி ராணி தொலைக்காட்சித் தொடரில் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்தார்.

இவர் மலேசியா சென்றுவந்த பிறகு அங்கு கிடைத்த அனுபவத்தை வைத்து சென்னை, பெசண்ட் நகரில் சா ரிபப்ளிக், பப்லி டீ ஷாப் என்ற தேனீர் கடையைத் துவக்கினார். இதனிடையே இவர் பீனா என்ற பெண்ணை கடந்த 1994ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்தார். இவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் இருக்கிறான்.

இப்படியான நேரத்தில் பப்லு ஷீத்தல் என்கிற 24 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. அவ்வப்போது மனைவியுடன் கொஞ்சல் , ரொமான்ஸ் , வானத்தில் ப்ரொபோஸ் என சமூகவலைதளவாசிகளை செம கடுப்பேற்றி வந்த பப்லு சில தினங்களுக்கு முன்னர் இரண்டாம் மனைவியையும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியது.

அதற்கு அவர் தெளிவில்லாத விளக்கத்துடன் பேட்டியும் கொடுத்திருந்தார். ஷீத்தல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பப்லுவுடன் எடுத்துக்கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை டெலீட் செய்து கணவர் பப்லுவை பிரிந்துவிட்டது போல் காட்டிக்கொண்டது தான் இந்த விவகாரம் பேசும்பொருளானது. ஆனால், தற்போது மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர் இந்த ஜோடி. ஆம், பப்லு அண்மையில் வெளியான இந்தி திரைப்படம் “அனிமல்” படத்தில் நடித்திருந்தார். படத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்தாலும் பப்லுவின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டினர்.

இந்நிலையில் அனிமல் படம் மெகா ஹிட்டாகிவிட்டதாக கூறி படக்குழு சார்பில் பிரமாண்ட பார்ட்டி ஒன்று நடத்தப்பட்டது. அதில் பப்லு தனது மனைவி ஷீத்தல் உடன் இணைந்து கலந்துக்கொண்டார். பார்ட்டியின் போது ராஷ்மிகா மந்தனா, பப்லு, ஷீத்தல் ஆகிய மூன்று பேரும் ஒன்றாக செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக பப்லுவும், ஷீத்தலும் மீண்டும் இணைந்துவிட்டார்கள் என நெட்டிசன்ஸ் கூறி அந்த போட்டோவை ஷேர் செய்து வருகிறார்கள்.

Views: - 213

0

0