தனி தீவில் இரு ஆண் பிரபலங்களுடன் ரஜினியின் மகளா..? யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க..

Author: Rajesh
13 August 2023, 1:50 pm
Quick Share

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.

முக்கியமாக திறமை இருந்தும் வாய்ப்பில்லாமல் தவித்து வந்த பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் போன்றோருக்கு ரஜினிகாந்தின் படங்கள் திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது. பீஸ்ட் படத்தின் மூலம் நெகட்டிவ் ரிவியூஸ் பெற்ற நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படம் செம கம்பேக் ஆக அமைந்துள்ளது.

ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவா ராஜ்குமார் மற்றும் பலர் நடிப்பில் வெளியான இப்படம் திரையரங்குகளில் வெற்றி நடைபெற்று வருகிறது. இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். சௌதர்யா கோவா படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர், பாபா, சந்திரமுகி உள்ளிட்ட பட திரைப்படங்களில் கிராபிக் டிசைனராக பணியாற்றியுள்ளார்.

மேலும், கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இந்நிலையில், இவர் அளித்த பேட்டி ஒன்றில், தனி தீவில் மாட்டிக்கொண்டால், யாருடன் இருக்க ஆசைபடுவீர்கள் என கேள்வி கேட்ட போது, பதிலளித்த சௌதர்யா ‘ஷங்கர் மற்றும் ராஜமௌலியுடன் இருக்க ஆசை. அவர்களிடம் நிறைய விஷயங்கள் பேசவேண்டும்’ என கூறியுள்ளார்.

Views: - 424

0

0