சூர்யாவுடன் தரையில் உருண்டு சண்டை போட்ட கார்த்தி ..-இதன் பின்னணியில் இப்படி ஒரு காரணமா?

Author: Vignesh
29 May 2023, 2:44 pm
surya -updatenews360
Quick Share

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வம் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய் பச்சனும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்தபடத்தில் திரிஷா கார்த்தி இடையில் காதல் காட்சிகள் இருக்கும். இதில் கார்த்தி திரிஷாவிடம் பேசிய காதல் வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

surya -updatenews360

இந்நிலையில், பலருக்கும் தெரியாத விஷயத்தை நடிகர் கார்த்தி பேட்டி ஒன்றில் பகிர்ந்து உள்ளார். அதில் சிறுவயதில் தானும் தன் அண்ணன் சூர்யாவும் மோசமாக சண்டை போட்டுக்கொள்வோம் என்றும், சில சமயங்களில் கட்டி உருண்டு இருக்கிறோம் என்றும், அந்த அளவுக்கு சண்டை போட்டதாகவும், அதன் பின்னர் தான் அமெரிக்காவிற்கு படிக்க சென்றேன் அப்போது தன்னை அதிகமா மிஸ் பண்ணியிருப்பார் என்று கார்த்தி தெரிவித்துள்ளார்.

Views: - 328

0

0