அஜித் செஞ்சது ரொம்ப தப்பு… அந்த விஷயத்தில் அவரை மன்னிக்கவே மாட்டேன் – தமன்னா!

Author: Shree
16 October 2023, 4:53 pm
tamannah
Quick Share

2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது.

இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக ஆக்ஷன் திரைப்படம் தமிழில் வெளிவந்தது. இதன்பின் தமிழில் எந்த ஒரு படத்திலும் தமன்னா நடிக்கவில்லை. ஆனால், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தியில் தயாராகிய ஆந்தாலஜி படமாக லஸ்ட் ஸ்டோரி 2 படத்தில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். அதையடுத்து தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்து வருகிறார்.

குறிப்பாக ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு தமன்னா போட்ட தமிழ்நாடு முழுக்க பரவலாக பேசப்பட்டது. தற்ப்போது பீக்கில் இருக்கும் நடிகைகள் லிஸ்டில் தமன்னாவும் இடம் பிடித்துவிட்டார். அதற்காகவே அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக அதில் தமன்னாவின் நடனம் எல்லோரையும் கவர்ந்து எக்கசக்க ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி சோஷியல் மீடியாக்களில் அனல் பறந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை தமன்னா அஜித் குறித்து பேசியுள்ளார். அதாவது அஜித்தின் வீரம் படத்தில் நடித்தபோது அவரின் வயதான தோற்றம் உங்களுக்கு செட் ஆகவில்லை. நீங்களும் இப்படி நினைத்தீர்களா? அவர் டைய் அடித்துக்கொண்டு யங் மேன் லுக்கில் நடித்திருந்தால் உங்களின் பேர் மேட்ச் சிறப்பாக இருந்திருக்கும் என்று? என கேட்டதற்கு…. ஆம், நினைத்தேன்.

உண்மையில் எனக்கும் அது பிடிக்கவில்லை. ஆனால் இப்போது எனக்கு இருக்கும் சுதந்திரம் அப்போ யாரும் கொடுக்கவில்லை. அதனால் என் விருப்பத்தை கூட தெரிவிக்கமுடியாத ஒரு நிலையில் தான் நான் நடித்தேன். இப்போ மாதிரி என்றால் நிச்சயம் கேட்ருப்பேன். என் விருப்பத்தை சொல்லியிருப்பேன். தலைக்கு டை அடிக்காமல் இருப்பது தனிப்பட்ட நபராக அஜித்திற்கு சரியாக படலாம்.

ஆனால், ஒரு திரைப்படம் என்பது பலகோடி ரசிகர்களை சென்றடையும். பத்து பேர் இணைந்து ஒரு படத்தை உருவாக்கும் பொழுதுஅவர்களுடைய கருத்தை கேட்டு அவர்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வது ஒரு நடிகருடைய கடமை. அதுதான் சிறந்த நடிகருக்கு அர்த்தம். எனவே நடிகர் அஜித் தன்னுடைய முடிக்கு டை அடித்துக் கொண்டு நடிப்பதில் தவறில்லை. வீரம் படத்தில் அப்படி செய்தது ஏற்றுக்கொள்ளமுடியாதது தான் என வெளிப்படையாக கூறினார்.

Views: - 250

0

0