இலங்கையில் என்ன நடந்தது? இளையராஜா மகள் மரணத்திற்கு காரணம் இதுவா? அதிரவைக்கும் செய்தி!

Author: Rajesh
25 January 2024, 9:56 pm
ilayaraja daughter death
Quick Share

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா , பவதாரிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார். இதனிடையே அவர் இன்று மாலை 5.20 மணிக்கு திடீரென மரணமடைந்துள்ளார்.

இந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . பாடகி பவதாரிணி கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து உயர்தர சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இதனிடையே “ஆயுர்வேத சிகிச்சை”க்காக குடும்பத்தினர் அவரை இலங்கைக்கு சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி திடீரென மரணித்துள்ளதாக வெளிவரும் செய்திகள் கூறுகிறது. இதையடுத்து இலங்கையில் சிகிச்சையின் போது என்ன நடந்தது? ஆயுர்வேத சிகிச்சை தான் மரணத்திற்கு காரணமா? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளது.

Views: - 935

0

1