மூன்று பேர் வாழ்க்கை மூழ்குது… வாய்ப்பு கொடுத்து காப்பாத்தும் ஆண்டவர்!

Author: Shree
13 March 2023, 8:41 pm
kamal

kamal

Quick Share

தமிழ் சினிமாவின் உலக நாயகன்

நடிகர், பாடகர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார். இவரது கைவசம் பாரதியுடு 2 படம் உள்ளது. அதில் மும்முரமாக நடித்து வருகிறார்.

இந்த சமயத்தில் தான் தற்போது வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் பிரபலங்கள் மூன்று பேருக்கு தன்னால் முடிந்த உதவி செய்து வாய்ப்பு கொடுத்து தூக்கி விடுகிறாராம் கமல் . சிவகார்த்திகேயன் பெருதும் நம்பிய பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வி அடைந்து மூலையில் உட்காரவைத்துள்ளது.

அதனால், அதிலிருந்து மீண்டு வருவதற்காக சிவகார்த்திகேயனுக்கு தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் கமல் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதையடுத்து தேசிங்கு பெரியசாமி. இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் சூப்பர் ஹிட் கொடுத்து அதன் பின்னர் சரியான வாய்ப்பு கிடைக்காமல் அல்லல் பட்டு வருகிறாராம்.

அதையடுத்து விக்னேஷ் சிவன், அஜித் படத்தை இயக்க சென்று அசிங்கப்பட்டு மார்க்கெட் டவுன் ஆகும் தக்க சமயத்தில் கமல் கை கொடுத்து தூக்கிக்கொண்டாராம். ஆம், இந்த மூன்று பேரின் படத்தையும் பெரிய பட்ஜெட்டில் தயார் செய்து அவர்களை காப்பாற்ற பெரிய மனசு வைத்துள்ள ஆண்டவரை அவர்கள் கடவுளாக கும்பிட்டு வருகிறார்களாம்.

Views: - 392

1

0